24 special

சகஜமாகும் வெட்டு கொலைகள்!

MURDER ISSUE
MURDER ISSUE

தற்போதயெல்லாம் தமிழகத்தில் வெளியாகும் செய்திகளை பார்க்கும்போது இதய கோளாறு சீக்கிரமாக வந்து விடுவது போல் இருக்கிறது அப்படிப்பட்ட பரபரப்பான மற்றும் திடுக்கிடும் சம்பவங்களே அதிகமாக நடக்கிறது. ஒரு பக்கம் சிறு குழந்தைகளுக்கு கூட பாலியல் தொந்தரவு நடக்கிறது மறு பக்கம் ஆளில்லாத வீட்டை கண்காணித்து தீரன் படத்தை போன்று வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் ரொக்கத்தை திருடி வீட்டில் இருப்பவர்களையும் கொலை செய்து விட்டு சென்று விடுகிறார்கள். மேலும் தன்னை ஏமாற்றி விட்டாள் என்று இளைஞர்கள் நல்ல வேலை மற்றும் கை நிறைய சம்பாதித்து வந்தால் கூட தனது உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அதே சமயத்தில் சாலைகளில் நடக்கும் விபத்துக்களை பார்க்கும் பொழுது இக்காலத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனம் கேட்டாலே அதை ஓட்டி சென்றாலே பத்திரமாக செல்ல வேண்டும் என்ற ஒரு பதட்டம் பெற்றோர்களுக்கு எழுகிறது.


இந்த சம்பவங்கள் அனைத்தும் திடீரென்று தனக்கான முடிவைத்தானே தேடி கொள்கிறார் அல்லது எதிர்பாத விதமாக நடக்கிறது என்று கூட எடுத்துக் கொள்ளலாம் ஆனால் பட்டப் பகலில் பொதுவெளியில் ஒருவரை கத்தியால் வெட்டுவது என்பது அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல ஆனால் இன்று அந்த அசாதாரணமான சம்பவம் கூட சாதாரணமாக நிகழ்கிறது.அப்படி பொதுவெளியில் அவர்கள் வெட்டுவதற்கு எங்கிருந்து தைரியம் வருகிறது என்று பார்க்கும் பொழுது ஒன்று அவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆக்கியிருக்கிறார்கள் குடிப்பழக்கத்தில் தன்னையும் மறந்து ஒருவர் மீது கோபமாக இருக்கும் போது அவரை வெட்டும் அளவிற்கு செல்கிறார்கள் மற்றொரு பக்கம் அவர்களுக்கு ஏதேனும் ஆதாயம் இருந்திருக்கும் அதற்கான காரணத்திற்காகவும் அவர்களை கொலை செய்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் எங்கேயோ ஒரு மூலையில் நடக்கவில்லை நமது தமிழகத்தில் கடந்த வருடத்தில் நடந்துள்ளது, அதாவது சென்னை மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி ரயிலில் சமோசா மற்றும் பல வியாபாரம் செய்பவர்.

அதனால் வழக்கம்போல் எழும்பூரில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் தனது வியாபாரத்தை செய்து கொண்டு வந்த ராஜேஸ்வரி சைதாப்பேட்டை நடைமேடையில் இரவு 8 மணி அளவில் வியாபாரம் செய்து வந்துள்ளார் அப்பொழுது திடீரென்று ரயிலில் இருந்து இறங்கிய நான்கு மறுமணம் அவர்கள் கத்தியால் ராஜேஸ்வரியை தாறுமாறாக தாக்கி விட்டு சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்திருந்த ராஜேஸ்வரி ரயில்வே போலீசார் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர் இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு பின்னால் என்ன காரணம் என்று விசாரிக்கும் பொழுது ராஜேஸ்வரிக்கு மூன்று கணவர்கள் இருந்ததாகவும் அதில் ஒரு கணவர் இறந்தவிட்டதாகவும் இரண்டாவது கணவருடன் தற்போது ராஜேஸ்வரி வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது அதனால் தவறான உறவு பழக்கத்தால் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கும் என்ற வகையில் போலீசார் தனது சந்தேகத்தை முன் வைத்தனர். இருப்பினும் ஒரு பொதுவெளியில் ஒருவரை வெட்டிக் கொள்வதற்கு எப்படி அவர்களுக்கு தைரியம் வருகிறது என்று பார்த்தால் இதற்கு பின்னால் ஒரு ரவுடி கும்பலே இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதே போன்று ரயில் நிலையத்தில் கணவர் தன் மனைவியை வெட்டிக்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தற்போது தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் ஒரு இளைஞர் இளம்பெண்ணை விரட்டி விரட்டி கத்தியால் வெட்டியுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த கொலையாளியை மடக்கி பிடித்து தீவிர விசாரணையை நடத்தினர். அப்பொழுதுதான் போலீசாருக்கு தெரிய வருகிறது இருவரும் தம்பதிகள் என்பது! மேலும் அந்த இளைஞனின் பெயர் வெங்கடேசன் தாக்கப்பட்ட இளம் பெண் அவரது மனைவியான பானுமதி, சில நாட்களாகவே வெங்கடேசன் தன் மனைவியான பானுமதி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்துள்ளார் அதற்கு பிறகு தன் உறவினரை பார்ப்பதற்காக கிண்டி ரயில் நிலையம் வந்த பானுமதியை வெங்கடேசன் சந்தேகப்பட்டு கத்தியால் தாக்கியுள்ளார்! இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மேலும் இது குறித்த விசாரணையும் தற்போது தீவிரமாக முன்வைக்கப்படுகிறது.