24 special

இப்போ பேனா சின்னம் ரெம்ப முக்கியமா...? சீரியெழுந்த பெண்மணி...!

Mk stalin
Mk stalin

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அணைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் என முதல்வர் ஸ்டாலின் ஒரு புறம் பேசிக்கொண்டு இருக்க கள நிலவரம் நொடிக்கு நொடி மாறிக்கொண்டு இருப்பதை அப்படியே படம் பிடித்து காட்டி இருக்கிறது.நாங்க எல்லாம் 10 ஆயிரம் சம்பளத்திற்கு பையை தூக்கிக்கொண்டு பஸ் பிடித்து வேலைக்கு அலைந்து கொண்டு இருக்கிறோம் ஆனால் இங்கு செந்தில் பாலாஜி போன்றொருக்கு பதவி கொடுத்து சம்பாரிக்கதான் பார்க்கிறார்கள்.


ஏன் சார் நா தெரியாமத்தான் கேட்கிறேன் கையில் ஒரு செங்கலை வைத்து கொண்டு இந்த உதயநிதி எய்ம்ஸ் எங்க எங்க என கேட்டாரே? சரி இப்போ கலைஞருக்கு பேனா சிலை தேவையா? அந்த காசில் நீயே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொடுத்து வேலையை தொடங்கி இருக்கலாமே..!

நான் காங்கிரஸ் கட்சி அதை எங்கயும் சொல்லுவேன் ஆனால் இப்போ ஆட்சி சரியில்லை சார்? இந்த ஆட்சி போனால் நல்லது இல்லை என்றால் தவறுகளை சரி செய்தால் மட்டுமே நல்லது நடக்கும் என ஒரே போடாக போட்டு விட்டார்.

வழக்கமாக ஆளும் கட்சி என்றாலே அதற்கு எதிர்ப்பு நிலை உருவாவது என்பது இயற்கையானது ஆனால் சாமானிய மக்கள் நீ எய்ம்ஸ் எங்க என செங்களை வைத்து கொண்டு கேள்வி கேட்ட இப்போ கலைஞர் பேனா சின்னம் தேவையா என சாமானிய மக்களும் அரசியல் நகர்வுகளை அறிந்து வைத்து இருப்பதுதான் ஆளும் திமுகவை அதிர செய்துள்ளது.