24 special

இவ்வளோ தூரம் போயிருச்சு...!இனி திமுக ஆட்சி அம்போ தான் ..!

Mkstalin
Mkstalin

தமிழக முதல்வர் ஸ்டாலினும் அவரது மகனும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதியும்  வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி 15 லட்சம் தவறுவதாக சொன்னாரே ஒரு 15 ரூபாயாவது தந்தாரா? என கேள்வி எழுப்பி இருந்தனர்.


பாஜக சார்பில் பலமுறை பிரதமர் சொன்னது குறித்து விளக்கம் கொடுத்த போதும் திமுக அதை ஏற்கவில்லை இந்நிலையில் திமுக சார்பில் கொடுத்த வாக்குறுதி குறித்தும் அது நிறைவேற்றிய விதம் குறித்தும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

இந்நிலையில் மது பிரியர் ஒருவர் கருத்தை பதிவு செய்தார் அதில் எல்லாரையும் குறை சொல்லும் திமுகவினர் முதலில் பொங்கலுக்கு பணம் கொடுத்தாரா எதிர் கட்சியா இருக்கும் போது ஸ்டாலின் கேட்டார் சரி விடுங்க 1000 ரூபாய் வேண்டாம் ஒரு 5 ரூபாயாவது கொடுத்தாரா?

கரண்ட் பில் ஏறி போச்சு சார்? இலவச பஸ் ஒன்னை கொடுத்து விட்டு அனைத்தையும் ஏற்றி விட்டார் ஒன்று இரண்டு திட்டத்தை நிறைவேற்றிவிட்டு இப்படி பேசுவது சரியா என அழுத்தம் திருத்தமாக மது பிரியர் தனது வேதனையை பதிவு செய்தார்.

முதலில் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் பிறகு மோடியை கேட்கலாம் மோடியை குறை சொல்லி தானே ஆட்சியை பிடித்தீர்கள் இன்னமும் மோடியை குறை சொல்லாமல் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.