24 special

கேரளா ஸ்டோரி தமிழகத்திலும் அரங்கேறியது..! அதிரடி திருப்பம்

Kerala story
Kerala story

கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில் அப்படத்தில் வரும் காட்சிகளை போலவே, தமிழகத்தில் செல்வி என்ற பெண்ணிற்கு அரங்கேறி இருக்கும் சம்பவம் தற்போது மாநிலம் முழுவதும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.


இம்ரான் என்ற நபருடன் நட்பாக பேசி வந்த நிலையில்  திடீர் என எனக்கு சம்மதம் இல்லாமல் எனது பெயரை மாற்றி திருமண பத்திரிகை அடித்து விட்டதாகவும், எனக்கு மதம் மாறவோ அல்லது பெயரை மாற்றவோ விருப்பம் இல்லை எனது முதல் விருப்பம் நான் நானாக செல்வியாகவே இருக்கனும், நான் படிக்க வேண்டும் எனக்கு திருமணம் வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார் செல்வி.

இந்த நிலையில் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன, ஏன் உண்மையான காதல் என்றால் செல்வி தான் பெயரை மாற்ற வேண்டுமா இம்ரான் மதம் மாறி செல்வியை கை பிடிக்கலாமே என சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதாக இந்து முன்னணி தொடங்கி இந்து மக்கள் கட்சி என பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது நேரடியாக செல்வி என்ற பெண் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு இருப்பது தமிழகத்திலும் கேரளா ஸ்டோரி அரங்கேறி வருவதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

இனியாவது இது போன்ற விஷயங்களில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்த தொடங்கி இருக்கின்றனர்.