24 special

நயன்தாரா படத்தை பற்றிய உண்மையை போட்டு உடைத்த கிஷோர் கே ஸ்வாமி....

nayanthara, kishore k swamy
nayanthara, kishore k swamy

 சினிமாவில் இருப்பவர்களுக்கும் சர்ச்சை மற்றும் கிசுகிசுகளுக்கும் அதிக தொடர்பு இருப்பது உண்டு ஆனால் சர்ச்சை மற்றும் கிசுகிசுக்கள் என்பது அதிகமாக சினிமா துறையில் உள்ளது ஒருவரை குறித்து வைரலாகும் என்றால் அது நயன்தாராவே! நயன்தாரா சினிமா துறையில் காலடி எடுத்து வைத்த ஆரம்பத்தில் இருந்து பல சர்ச்சைகளில் சிக்கினார். முதலில் சிம்புவின் காதல் கிசுகிசு அதற்குப் பிறகு தனுஷின் காதல் கிசுகிசு இரண்டிற்கும் இடையில் நடிகர் பிரபுதேவாவின் காதல் கிசு கிசு எனத் தொடர் காதல் குறித்த கிசுகிசுக்களில் அதிகமாக வைரலான நயன்தாரா ஒரு சமயத்தில் திரையுலகை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார்.அதற்குப் பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து தமிழ் திரை உலகின் முக்கிய கதாநாயகியாக தற்போது உருவெடுத்துள்ளார். இருப்பினும் அவரை விட்டு இன்னும் கிசு கிசுக்களும் சர்ச்சையும் விலகிச் செல்லாமல் உள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் இவனை காதலித்து வந்த நயன்தாரா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் திருமணமாகிய சில மாதங்களிலேயே அவருக்கு இரட்டை குழந்தை பிறப்பதாக அறிவித்திருந்தார் வாடகை தாய் மூலம் தங்களது குழந்தைகளை பெற்றுக் கொண்டதாக விக்னேஸ்வரன் நயன்தாராவும் தெரிவித்தது பல செய்தி தொலைக்காட்சிகளில் பேசு பொருளாகவே மாறியது. இப்படி சர்ச்சைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும்  சமீபத்தில் கூட சென்னை மழை பாதிப்பால் பெரும் சேதத்தை சந்தித்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளோடு தன் சொந்த நிறுவனத்தின் நாப்கினை வழங்கிய நயன்தாரா அதை போட்டோவாகவும் வீடியோவாகவும் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டதும் பெரும் வைரலாகி விமர்சனங்களை பெற்றது! இந்த நேரத்தில் கூட உங்களுக்கு விளம்பரம் தேவையா பிசினஸ் மைண்ட் தானா என்ற பல சர்ச்சைக்குரிய கருத்துக்களும் நயன்தாராவின் இந்த பதிவிற்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமின்றி என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறாதீர்கள் என ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியதும் வைரலானது. என்னதான் அதிக சர்ச்சைகளை நயன்தாரா பெற்று இருந்தாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஒரு நாளும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் சொல்கிறது அதிலும் குறிப்பாக தற்பொழுது பெண் கதாபாத்திரங்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா தற்போது மீண்டும் ஒரு சர்ச்சில் சிக்கி உள்ளார். அதாவது சமீபத்தில் நயன்தாரா நடித்த அன்னபூரணி படம் வெளியானது. அதுவும் சென்னை மற்றும் தென் தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்பில் இருக்கும் பொழுது வெளியிடப்பட்டிருந்தது இதனால் இப்படம் வெளியான செய்திக் கூட சிலருக்கு தெரியாமல் இருந்தது. முற்றிலும் பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடித்த நயன்தாராவிற்கு இப்படம் தோல்வியை கொடுத்தது என்று தான் கூற வேண்டும். 

இந்த நிலையில் நயன்தாரா நடித்த அன்னபூரணி படம்  குறித்து அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் X  பதிவில் கூறும்போது, 'அன்னபூரணி என்ற மொக்கை படம். எப்படியும் ஐயருங்க பிரச்னை பண்ணுவாங்க. அதை வெச்சு படம் ஓடிடுமுன்னே நினைச்சு கிளம்பிருக்கானுங்க. அவங்க கண்டுக்கவே இல்லை. மக்களும் கண்டுக்கலை. படம் செம்ம அடி.உணவுக்கு ஜாதி, மதம் ஏதுன்னு ஒரு டயலாக். அடுத்த சீனே தலையிலே முக்காடு போட்டுக்கிட்டு ஐயர் பொண்ணு நமாஸ் பண்ணிட்டு பிரியாணி சமைக்குற மாதிரி காட்சி. ‘டேய்.. என்னங்கடா இது?’முஸ்லீம் பையன், “சமைக்கிறது வேலை’ அப்படின்னு டயலாக் விடுறான். சரி, அப்போ பன்னிக் கடை வைப்பதும், பன்னிக்கறி சமைக்கிறதும் வேலைதான். நீ செய்வியா? ஒரு பேச்சுக்கு.. ஹீரோ ஐயரு, ஹீரோயிம் முஸ்லீம் அப்படின்னு இதே கதையை மாத்தி எடுத்திருந்தா என்ன கலவரமெல்லாம் நடந்திருக்கும்?! என்று பதிவிட்டுள்ளார் இது இணையங்களில் தற்போது வைரலாகிறது.