Cinema

வெளிநாடுகளில் கூத்தாடிய நடிகர்கள்...? திரை விமர்சகரின் வைரலாகும் ட்வீட்!

Surya, Ajith
Surya, Ajith

தமிழ் சினிமாவின் மூத்த கலைஞரும், நடிகர் சங்க முன்னாள் தலைவருமான விஜயகாந்த் இறப்பு தமிழகத்தையே வாட்டியது. 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தியதாக அவர் மனைவி பிரேமலதா தெரிவித்து இருந்தார். ஆனால் இதில் நிறைய இளம் நடிகர்கள் வரவில்லை என்பதே தற்போதைய பிரச்னையாகி இருக்கிறது. குறிப்பாக புளூசட்டை மாறன் நடிகர்களை சிக்க வைத்து மக்களிடம் முகத்திரையை காட்டி வருகிறார்.


விஜயகாந்த் இறப்புக்கு பெரும்பாலும் அவருடன் நடித்த முன்னணி நடிகர்கள் எல்லாம் வந்திருந்தனர், அப்போது வரமுடியாமல் வீடியோ மூலம் பதிவிட்ட சரத்குமார் நேரில் வந்து விஜயகாந்த் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். ஆனால், இப்போது விஜயகாந்த் உடன் நடித்து பெரிய ஆளாக மாறிய சூர்யா வீடியோ பதிவது மட்டுமில்லாமல் எங்கோ காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார் அது தான் பேசும் பொருளாக மாறியது. அவரை தெடர்ந்து அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால் மற்றும் கார்த்திக் ஆகியோர்கள் எங்கே சென்றார்கள் என விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளன.

ஆனால், இவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் ஷூட்டிங்கில் இருப்பதாக சிலர் அவர்களுக்கு  ஆதரவாக கொடி பிடித்தனர். கலைஞர் இறப்பின் போது உடம்பு முடியாமல் அமெரிக்காவில் இருந்து உடனே ப்ளைட் பிடித்து வந்து நடுராத்திரியில் அவருக்கு அஞ்சலி செலுத்தியவர் விஜயகாந்த். ஆனால் அவருக்கு இளம் நடிகர்கள் இப்படி செய்யலாமா? சூர்யாவாவது வீடியோ மூலம் இரங்கலை தெரிவித்தார் ஆனால் அவரது தந்தை சிவகுமார் குறித்து பலரும் பேசி வருகின்றனர். சூர்யாவுக்கு வாய்ப்பு கேட்டு அப்போது விஜயகாந்த் காலடியில் கிடந்த சிவகுமார் இப்போது ஏன் வரவில்லை என விமர்சனம் எழுந்ததது. இந்நிலையில் உத்தமர் சிவகுமார் திரும்பியே பார்க்கவில்லையே. நடிகர் சங்க தேர்தலின் போது ஆதரவு கொடுக்கவில்லை என்ற கோபமோ? விஜயகாந்த் அன்று நல்லவர்கள் வென்றால் போதும் என்று கூறியிருந்தார் யாரையும் ஆதரிக்கவில்லை. இதையெல்லாம் ஒரு காரணமாக எடுத்து கொண்டு வராமல் இருப்பது நியாயமல்ல என சினிமா வட்டாரத்தில் கிசு கிசு கின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் புளூசட்டை மாறன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை. வெளிநாட்டில் ஷூட்டிங் என காதுகுத்திய பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள். ஆங்கில புத்தாண்டை வெவ்வேறு நாடுகளில் கொண்டாடிவிட்டு சென்னை வந்துவிட்டனர். ஓரிரு நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு ஆறாம் தேதி நடைபெறும் ‘கலைஞர் 100’  கலைநிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டு இருக்கின்றனர் எனக் குறிப்பிட்டார். இதில் ரொம்பவே ட்ரோல் ஆகி இருப்பது அஜித் தன்னுடைய குடும்பத்துடன் துபாயில் கப்பல் பயணம் செய்த வீடியோ எனக் கூறப்படுகிறது. கொஞ்ச நாளைக்கு சும்மா இருந்தா நாங்களே மறந்துடுவோம். சும்மா எதையாவது செஞ்சி திட்டு வாங்கியே வைரல் ஆகாதீங்க என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.