24 special

கிருஷ்ணசாமி "கடும் எச்சரிக்கை" விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தல்!

Thirumavalan and krishnasamy
Thirumavalan and krishnasamy

தமிழகத்தில் மாட்டு கறி சாப்பிடும் ஒரு சிலரின் குணத்தை ஆதி திராவிட மக்கள் மீது திணிக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஆம்புரில் பிரியாணி திருவிழாவில் மாட்டு கறி பிரியாணி விருந்திருக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று மிக பெரிய ஆர்ப்பாட்டதை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தியது.


மேலும் இந்த சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு பட்டியல் ஆணையம் நோட்டீஸ் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டிஸ் அனுப்பியது இந்த சூழலில் தான் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்தார் அது பின்வருமாறு : தமிழ் சமுதாயம், வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. மாடுகள், விவசாயிகளின் நண்பனாக இருந்திருக்கிறதே தவிர, அது உணவாக பயன்படுத்திய வரலாறு இல்லை.

புலால் உணவு, இந்த நாட்டை ஆக்கிரமித்த அன்னியர்களிடம் தொற்றிய வியாதி. சிலர் வலிந்து தமிழ் சமுதாயத்தின் மீது, குறிப்பாக ஆதிதிராவிட மக்கள் மீது, மாட்டுக்கறி அடையாளத்தை திணிக்க நினைக்கின்றனர். தமிழர்களின் 75 சதவீதம் பேர், எந்தக் காலத்திலும் மாட்டுக்கறி உணவை தொடாதவர்கள். மீதமுள்ள 25 சதவீத மக்களும், சில சூழல்களில் மட்டுமே மாட்டுக்கறி சாப்பிடக் கூடியவர்கள். முகலாயர்கள், ஆங்கிலேயர்களால் செய்ய முடியாததை, அம்பேத்கர் பெயரில் அரசியல் நடத்தும் திருமாவளவன் போன்றவர்கள் முயற்சிக்கின்றனர்.

சிறுபான்மையினரின் ஓட்டுகளைப் பெறும் அரசியல் ஆதாயத்திற்காக, மாட்டுக்கறியை, ஆதிதிராவிட மக்களின் உணவாக முத்திரை குத்த முயற்சி செய்கின்றனர். இவர்களின் அரசியல் பிழைப்புக்கு, அம்பேத்கரை துணைக்கு அழைப்பது வேடிக்கையாக உள்ளது.

ஆதிதிராவிடர் பட்டியலில் உள்ள தேவேந்திரகுல வேளாளர்கள், மாட்டுக்கறியை என்றுமே உண்டதில்லை. மாட்டுக்கறி சாப்பிடும் ஒரு சிலரின் உணவு பழக்கத்தை பொதுவாக்கி, இழிவை சுமத்துவதை ஏற்க முடியாது. போலி அம்பேத்கரியவாதிகளிடம், ஆதிதிராவிட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கிருஷ்ணசாமி அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.