24 special

திருமணமான மூன்றே நாளில் கர்ப்பமானதால் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவன்!! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க....!

MARRAIGE ISSUE
MARRAIGE ISSUE

இன்றைய காலங்களில் திரையரங்குகள் பூங்காக்கள் போன்றவற்றிற்கு வெளியில் சென்றாலே எங்கு பார்த்தாலும் காதலர்கள் மயமாகவே உள்ளது. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து கொள்வதையே விரும்புகின்றனர். ஒருவரை பார்த்து அவர்களை கிடைத்துவிட்டால் உடனடியாக காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தி இவர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம்  தற்போது அதிகமாகிக் கொண்டே உள்ளது. இதில் சில காதலர்கள் அவர்கள் இருவர்களுக்கு இருவருக்கும் உண்மையாக இருந்து  திருமணம் செய்து கொண்டு வாழ்வு முழுவதும் ஒன்றாக இருக்கின்றனர். ஆனால் சிலர் ஒருவரை காதலித்து விட்டு பின்  அவரை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்கள் பிரிந்து செல்வதற்கு அவர்கள் குடும்பங்களில் ஜாதி மதம் போன்றவற்றை பார்த்து பிரிந்து செல்கின்றனர். மேலும் சிலர் அவர்களுக்குள்ளேயே பல சண்டைகள் போட்டு பிரிந்து விடுகின்றனர்.


அதிலும் சிலர் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வேறொருவருடன் பேசிக்கொண்டு இருப்பதினால் அவர்களுக்கு இடையில் விரிசல் ஏற்படுகிறது. இவ்வாறு இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிக அளவில் பொய்யான உறவுகள் உருவாகிக்கொண்டு உள்ளனர். இதனை பார்க்கும் பொழுது நம் கலாச்சாரம் எதை நோக்கி செல்கிறது என்றே தெரியாத அளவிற்கு உள்ளது. இப்படியே போனால் எதிர்காலத்தில் நம் தமிழ்நாட்டின் நிலைமை என்னவாக இருக்கும் என்று நினைத்து பார்த்தாலே மிகவும் பயமாக உள்ளது!!! இதனைத் தொடர்ந்து இது போலவே ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது!!நாகை மாவட்டத்தை சேர்ந்த சுகன்யா என்பவரும், அதே ஊரை சேர்ந்த வேதாரணியம் காவல் நிலைய முதல் நிலை காவலர் அருணும் 2018 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் பார்க், சினிமா போன்ற இடங்களில் சுற்றி வந்ததை அறிந்த பெற்றோர் அந்தப் பெண்ணிற்கு வேறொரு அவருடன் திருமணம் நிச்சயம் செய்தனர். 

பின் சுகன்யா அந்த திருமண வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்ட பிறகும், அருணை மறக்க முடியாமல் அவருடன் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது!! திருமணம் ஆன பின்னர் புது கணவரோடு வெளியில் ஊர் சுற்றிய சுகன்யா கணவருக்கு தந்த அதே இடத்தை காதலர்களுக்கும் தந்துள்ளார் என்று கூறப்படுகிறது!! இதைத் தொடர்ந்து அருளுடன் அவர் சுற்றி வந்த போது எல்லை மீறியதாகவும், இந்த நிலையில் திருமணம் ஆகி 3 நாளில் சுகன்யா கர்ப்பம் ஆனதும் வெளியாகி உள்ளது. இதை கணவனிடம் இருந்து மறைத்து வந்த சுகன்யாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு அதன் பின் உண்மை தெரிந்ததும் அவருடன் சேர்ந்து வாழ்வதற்கு கணவர் மறுப்பு தெரிவித்து வெளியில் அனுப்பியுள்ளார். 

அதன் பின் தன் தாய் வீட்டிற்கு சென்ற சுகன்யா கருவை கலைத்துவிட்டு, காதலர் அறிவோடு அவ்வப்போது இணங்கி இருந்து கொண்டு திருமணம் செய்து கொள்வார் என்று அவருக்காக காத்திருந்ததாக சொல்லப்படுகிறது! இந்த நிலையில் அருளுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் ஆகப்போகும் செய்தியை அறிந்து கொண்டு சுகன்யா அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாகை எஸ்பி அலுவலகத்தில் புகைப்பட ஆதாரங்களோடு புகார் அளித்துள்ளார். அருணும் அவரின் சகோதரியும் கூறியதால் தான் கருவை கலைத்ததாகவும், அதன்பின் அவருடன் ஒன்றாக இருந்து வந்த நிலையில் இப்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் சுகன்யா புகார் அளித்துள்ளார். இதற்கிடையே தன் சகோதரர் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்றும் சுகன்யா மீது தவறு இருப்பதாகவும் நாகை எஸ்பி அலுவலகத்தில் அருணின் சகோதரி கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்!! இதில் யார் பக்கம் தவறு உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்!! இதுபோன்ற விகாரங்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது செய்திகளை வெளியாகிக் கொண்டு உள்ளதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது மேலும் அதிக கவனத்தை செலுத்த ஆரம்பிக்கிறார்கள்.