Cinema

விஜயின் கடைசி படம்... கசிந்த வேற லெவல் தகவல்...

VIJAY,  H VINOTH
VIJAY, H VINOTH

இந்திய திரை உலகில் பிரபல ஹீரோக்களில் நீங்காத இடத்தை பெற்று இன்று வரையிலும் பல முன்னணி படங்களை நடித்து வருபவர் தான் நடிகர் விஜய். தனது நடிப்பு திறமையால் பல கோடி மக்களை ரசிகர்களாக பெற்று முன்னணி நடிகராகவே உள்ளார். மேலும் இவர் நடித்த படங்களில் பல பாக்ஸ் ஆபிஸில் உச்சக்கட்டத்தையே தொட்டுள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு பெரும்பாலான மக்கள் இவரின் படத்தினை விரும்பிப் பார்க்கின்றனர். கடைசியாக 2023, பிப்ரவரி மாதம் வெளியான லியோ படத்திற்கு நடிகர் விஜய் 150 கோடி ரூபாய் ஊதியமாக வாங்கியவர் என்று செய்திகள் வெளிவந்தது! இதில் விஜய் ஆக்சன் ஹீரோவாக நடித்திருந்ததால்  இந்தப் படம் மக்கள் பெரும் அளவில் ரசித்துப் பார்த்தனர். அது மட்டும் இன்றி விஜய் மற்றும் திரிஷா இருவரும் ரொம்ப வருடம் கழித்து ஒன்றாக இந்தப் படத்தில் நடிக்க வந்ததால் அவர்களின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல நல்ல விஷயங்களை சமூகத்தில் செய்து வந்தார். 


10 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு உதவி செய்வது, மழை நிவாரண பொருட்கள் அளிப்பது போன்ற பல நல்ல விஷயங்களை செய்து வந்தார். இதனை பார்த்த மக்களின் அவரின் ரசிகர்களும் இவர் ஒரு வேலை அரசியலுக்கு வருவாரோ என்று நினைத்தனர்!! மேலும் இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் பல கேள்விகள் எழுந்தது. இதைத் தொடர்ந்து இவர் தற்போது அரசியலுக்கும் வந்துவிட்டார். 2 பிப்ரவரி 2024 அன்று நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய் தனது அரசியல் கட்சிக்கு "தமிழக வெற்றிக் கழகம்" என்று பெயர் வைத்தார். இது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்துடன் வரவேற்கப்பட்டது. மேலும் ஓட்டர் ஐடி இல்லாத ரசிகர்கள் கூட உடனடியாக விஜய்காகவே ஓட்டர் ஐடி பதிவு செய்யவும் ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக ஒரு செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் உடனடியாக அவர்களின் ரசிகர்கள் அனைவரும் உறுப்பினராகவும் சேர்ந்தனர். மேலும் கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை இனி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அரசியலில் நுழைந்த விஜய் முழுமையாக சினிமாவில் இருந்து விலகப் போவதாக கூறினார். ஆனால் ஏற்கனவே ஒப்பந்தமிட்ட திரைப்படங்களில் மட்டும் நடித்து முடித்துவிட்டு, முழுமையாக அரசியலை மட்டும் மேற்கொள்வதாக கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்  வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, சினேகா மற்றும் லைலா போன்ற பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். இதை அடுத்து கடைசியாக ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக சினிமாவிலிருந்து விலகி, அரசியலில் முழு கவனம் செலுத்தப் போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் இவருடைய கடைசி படத்தினை இயக்குவதற்கு பல போட்டிகளுமே நடந்து கொண்டிருந்தது. மேலும் முழுமையாக அரசியல் சார்ந்த படமாக உருவாக்கப் போகும் விஜயின் கடைசி படத்தை H. வினோத் தான் இயக்கப் போகின்றார் என்ற தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் கோட் படத்தில் விஜய்  200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகின்ற நிலையில், இவருடைய கடைசி படத்தில் 250 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக ஒரு தகவல் வெளியாகிறது. கிட்டத்தட்ட ஒரு தேர்தலுக்கு செலவாகின்ற ஒட்டுமொத்த செலவையும் தனது கடைசி படத்தின் சம்பளமாக இவர் பெறுகிறார் என பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.