24 special

நமது இராணுவத்தில் ஒரே ஒரு வெளிநாட்டினர் மட்டும்தான் சேரமுடியும்! அந்நாட்டினார் யார் தெரியுமா ?

Indian army
Indian army

இந்திய ராணுவத்தில் வெளிநாட்டவர் சேரமுடியுமா? ஒரே ஒரு நாட்டவருக்கு தான் அந்த உரிமை உண்டு. நேபாளிகள், குறிப்பாக கூர்க்காக்கள்.இந்திய ராணுவத்தின் கூர்க்கா ரைபில்ஸ் டிவிஷனில் இருந்து வந்தவர் தான் புகழ்பெற்ற ஜெனெரல் சாம் மானேக்ஷா.


1846ல் நேபாளத்தை பிடிக்க சென்ற ப்ரிட்டிஷ் படைக்கு கூர்க்காக்கள் கடுமையான அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தார்கள். தோற்று பின்வாங்கிய ப்ரிட்டிஷ்படை தான் பிடித்த சிக்கிமை வைத்துக்கொன்டு நேபாளத்துக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்கள் நட்ட ஈடு கொடுக்கவும் ஒப்புக்கொண்டது.

அதன்பின் கூர்க்காக்களை ப்ரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்க அனுமதி கேட்டது ப்ரிட்டன். நேபாளமும் அனுமதித்தது. சுதந்திரத்துக்கு பின் இந்தியா- நேபாளம்- ப்ரிட்டன் போட்ட ஒப்பந்தத்தின்படி நேபாளிகள் இந்திய ராணுவத்தில் சேரலாம். பீல்ட்மார்ஷல் ஜெனெரல் கூட ஆகலாம்,

பிறப்பால் பார்ஸி மதத்தை சார்ந்த சாம் மானேக்ஷா கூர்க்கா ரைபிள்ஸ் ரெஜிமெண்டில் தான் பணியாற்றினார். அவர் அந்த ரெஜிமெண்டை பற்றி சொன்னது "எனக்கு மரணத்தை கன்டு பயமில்லை என ஒருத்தன் சொன்னால் ஒன்று அவன் பொய் சொல்லணும், அல்லது அவன் கூர்க்காவாக இருக்கணும்"இன்றும் 30,000 கூர்க்காக்கள் இந்திய ரானுவத்தில் உள்ளார்கள். 

credit - நியாண்டர் செல்வன்