Tamilnadu

வடை என கிண்டல் செய்த பிரசன்னா இந்த விநாயகர் ஜெயந்திக்கு கையேந்தி நிற்கும் அவலம் ! இலையாய் மிதக்கிறாராம்!

tamilan prasanna
tamilan prasanna

வசதி வரும்போதும், அதிகாரம் வரும்போதும் ஆட கூடாது என பெரியவர்கள் தங்கள் சந்ததிக்கு சொல்லிக்கொடுக்கும் பழக்கம் உண்டு அந்த வகையில் மைக் கிடைத்தால் போதும் என தேசத்திற்காக உழைத்த, உழைக்கும் தலைவர்களை மகா மட்டமான முறையில் விமர்சனம் செய்து வந்தவர் திமுகவை சேர்ந்த பிரசன்னா.ஆண்டாள் நாச்சியார் குறித்து வைரமுத்து தவறாக பேச அதற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தது, இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மாற்று மதத்தை சேர்ந்தவர்களும் குரல் கொடுத்தனர், ஆனால் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த பிரசன்னா விளக்கு பிடித்தார்களா என மட்டமான முறையில் பேசினார்.


அது மட்டுமின்றி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட பிரசன்னா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்கை குறித்து நா கூசும் வகையில் பேசினார், இதனை திமுகவை சேர்ந்த மூத்த அரசியல் நாகரிகம் கொண்டவர்கள் கூட கண்டித்ததாக கூறப்பட்டது.இந்த நிலையில் தான் பிரசன்னாவின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார், அவரது தற்கொலை சந்தேகத்திற்கு இடமானது என பல தரப்பிலும் குற்றம் சுமத்த பட்டு இருக்க, ஆளும் கட்சி என்பதால் விவகாரம் மூடி மறைக்கப்பட்டதாக கூறப்பட்டது, இந்த நிலையில் அன்றில் இருந்து திமுகவில் இருந்து முழுவதுமாக ஓரம்கட்ட பட்டார் பிரசன்னா.

எந்த முக்கிய விழாக்களுக்கும் அவர் அழைக்கப்படவில்லை, திமுக ஆட்சி அமைந்த முதல்நாள் சட்டமன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா புகைப்படத்தை எடுத்ததே மகிழ்ச்சி எனவும் பேசியவர் பிரசன்னா, கடைசியாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வடை என பதிவு போட்டு சென்றவர்தான் அதன் பிறகு அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.

தூக்கு கயிறு இங்கே மோடி எங்கே என கேட்ட பிரசன்னாவிற்கு அதே தூக்கு கயிற்றால் அரசியல் வாழ்கை முடிவிற்கு வரும் என்ற நிலையை உண்டாக்கியது அவரது மனைவியின் மரணம், தற்போது  தாடியுடன் தான் இன்னும் இருக்கிறேன் என சில நாட்களுக்கு முன்பு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார், அதில் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க கடலில் பயணித்து கொண்டு இருக்கிறது இலை என குறிப்பிட்டுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விநாயகர் ஜெயந்தி குறித்தும் அதன் பிறகு ஆண்டாள் நாச்சியார் குறித்தும் தவறாக பேசிய, கிண்டல் செய்த பிரசன்னாவின் நிலை இந்த ஆண்டு விநாயகர் ஜெயந்திக்கு தானும் இருக்கிறேன் என்று சொல்லும் அவல நிலைக்கு  கொண்டுவந்துவிட்டது என்கின்றனர் சமூக வலைத்தள வாசிகள்.ஒருகாலத்தில் பலரையும் நா கூசும் வண்ணம் விமர்சனம் செய்த பிரசன்னா இன்று தான் குற்றமற்றவன் என நிரூபிக்கவும் , மீண்டும் கட்சியில் தனது பழைய இடத்தை பெறவும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என ஆதரவாளர்களை நோக்கி கையேந்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது காலம் .