Tamilnadu

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!! மர்ம நபரால் பரபரப்பு!!

Prime Minister
Prime Minister

இந்தியாவில் தற்பொழுது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடந்து ஜூன் மாதம் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 10 வருட காலமாக இரண்டு முறை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக மோடி இருந்து வருகிறார். மேலும் நரேந்திர மோடி தனது ஆட்சி காலத்தில் வீடுகளில் டாய்லெட் கட்டிக் கொடுப்பது, ஒன்பது கோடி கிராமங்களில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைத்து ஏற்படுத்திக் கொடுப்பது, கொரோனா காலங்களில் தடுப்பூசி போன்றவற்றை செலுத்தியது, நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்தல் போன்ற பல திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நிறைவேற்றியுள்ளார். 


இது போன்று மக்களுக்கு பல உதவிகளை செய்து அதிக நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மேலும் மோடி கொண்டு வந்த திட்டங்கள் அனைத்துமே கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடைந்து உள்ளது. தமிழகத்தில் கூட இது போன்ற திட்டங்களை பயனடைந்தவர்களை நம்மால் பார்க்க முடிகிறது. விவசாயிகளுக்கான பல நல திட்டங்களை மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் பலரும் தற்பொழுது சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவை நினைவாக்கி வருகின்றனர். மேலும் சமீபத்தில் கூட நடிகை ராஷ்மிகா மந்தனா பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டு காலத்தில் இந்தியா சரியான பாதையில் போகிறது என்றும் புத்திசாலி நாடாக இருந்து வருகிறது என்று ரஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். 

 இந்த நிலையில் தற்பொழுது லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. மேலும் வருகின்ற ஜூன் 4ம் தேதி தேர்தலில் முடிவுகள் வெளிவர போகிறது. இது யார் மத்தியில் அமையப்போகிறார் என்று தெரிய வந்துவிடும்!! ஆனால் மீண்டும் பாஜக தான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றும், 10 வருட காலமாக பிரதமராக இருந்த நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராக ஆகப் போகிறார் என்றும் பல கருத்துக்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. மேலும் அரசியல் விமர்சகர்களும் இந்த கருத்தையே தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் இன்றி பிரபல தேர்தல் யூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோரூம் இதையே தான் தெரிவித்திருக்கிறார். எனவே மீண்டும் மோடி தான் பிரதமராக அமருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் ஒன்று வந்துள்ளது. அது குறித்து விரிவாக காணலாம்!!

நாட்டில் தேர்தல் நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில் மோடி அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும் தற்போது என்ஐஏ கட்டுப்பாட்டு மையத்திற்கு  மர்ம நபர் ஒருவர் போன் செய்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் அளித்திருக்கிறார். இதனால் போலீசார் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் உள்ள புரசைவாக்கத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் தீவிரவாதிகள், குண்டு வெடிப்பு போன்ற சதிகள் நடக்கும் பொழுது அந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வண்ணம் செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தற்போது இதன் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, தேசிய புலனாய்வு அதிகாரிகள் மிரட்டல் வந்த தொலைபேசி எண்ணை சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தப் பகுதியில் இருந்து அழைப்பு வந்தது என்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே பள்ளிகளில் குண்டு வைக்கப்பட்டுள்ளது என்று புரளிகள் கிளம்பியது. அதைத்தொடர்ந்து தற்பொழுது இது போன்ற ஒரு செய்தியும் பரவி வருவது ஒருவேளை நிஜமாக இருக்குமா? அல்லது இதுவும் புரளிதானா? என்று பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது!! தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.