24 special

கட்டுக்கதை ராணி ஸ்ரீவித்யா - கஸ்தூரியிடம் சிக்கிய திரவிடியன் ஸ்டாக்

Kasthuri,srividhya
Kasthuri,srividhya

சத்தியம் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் பல நடிகர் மற்றும் நடிகைகள் அரசியல் தலைவர்கள் என அனைவரின் நேர்காணலும் ஒளிபரப்பப்படுவது வழக்கம். குறிப்பாக சத்தியம் டிவியில் முக்தார் நிகழ்ச்சியில்  நேர்காணலின் போது பல குதர்க்கமான கேள்விகளும் அதற்கு சரமாரியான பதில்களும்  வெளிப்படும் நிலையில்.   பிரபலங்கள் பலரின் நேர்காணல்கள் எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதால்  சர்ச்சை ஏற்பட்டு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இந்நிலையில் சமீபமாக சத்தியம் தொலைக்காட்சியில் முக்தர் நிகழ்ச்சியில் திராவிட நட்பு கழகத்தின் பேச்சாளர் ஸ்ரீவித்யா உடன் நேர்காணல் நடைபெற்றது. மேலும் இந்த நேர்காணலில் நடிகை கஸ்தூரி பற்றி கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.இந்த நேர்காணலின் தொடக்கத்தில் முக்தார்  பேசும்போது நடிகை கஸ்தூரி 1990 ஆண்டுகளில் கலைத்துறையில் சாதனை படைத்துள்ளதாகவும் மேலும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர் என்று புகழ்ந்து பேசிய நிலையில் அவர்களை ஏன் அட்டாக் செய்கிறீர்கள் என்று ஸ்ரீவித்யாவிடம் கேள்வியை எழுப்பினார். 

இதற்கு ஸ்ரீவித்யா கஸ்தூரி சமூக ரீதியான படம் எதுவும் நடிக்கவில்லை என்றும் மேலும் மணிப்பூர் விவகாரம் நடந்து கொண்டிருக்கிறது அதற்கு எதிராக எந்த குரலையும் கொடுக்கவில்லை ஆனால் இரு பெண்கள் மது அருந்திய வீடியோ தனக்கு வந்தவுடன் திமுக ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை கொடுத்தால் அதையும் வைத்து பெண்கள் டாஸ்மாக்கில் நிற்பார்கள் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் என நடிகை கஸ்தூரியை குறிப்பிட்டு அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சித்து தன் கருத்தை தெரிவித்தார். 

மேலும் நடிகை கஸ்தூரி பணக்காரர்கள் யாரும் குடிப்பதில்லை என்றும் ஏழைகள் தான் குடிக்கிறார்கள் என  விமர்சித்ததாக முக்தார் நேர்காணலில் கூறியதற்கு எதிராக  நடிகை கஸ்தூரி பார்ட்டி வீடியோவை ஸ்ரீவித்யா வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பினார். மேலும் தனது சினிமா துறையில் நடக்கும் அவலங்களை தட்டிக் கேட்க முடியாத கஸ்தூரி ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்கள் டாஸ்மாக்கில் நிற்பார்கள் என சொல்லுவதற்கு தகுதி இல்லை  என்றும் மேலும் கஸ்தூரி யூடியூப் சேனலுக்கு நேர்காணல் செய்யும்போது லீலா பேலசில் 41 ஆயிரம் வரை குடித்து  செலவழித்துள்ளார் என பகிர் தகவலை கிளப்பினார். இதனால் கோபமடைந்த கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில் கடுமையாக முக்தாரையும் ஸ்ரீவித்யாவையும் விமர்சித்துள்ளார்.

நடிகை கஸ்தூரியின் twitter பதிவில் ஊடக மாண்புமிகு மாமா முக்தார் மற்றும் கட்டுக்கதை ராணி ஸ்ரீவித்யா இருவரும் ஒன்று கூடி அரை மணி நேரம் கஸ்தூரியை பற்றி  கூடி பேசி.     இல்லாதது பொல்லாத விஷயங்கள் பேசி இருப்பது  சரியாக இல்லை என்றும் இதை சும்மா விடப்போவதில்லை பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது ஆனால் இவர்கள் இருவருக்கும் சோறு கிடைக்க நான் பொறுப்பு என்றும் மேலும் சத்தியம் டிவி எல்லை மீறி விட்டதாகவும் பின் விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள் என்று சத்தியம் டிவியை எச்சரித்து முக்தாரையும் ஸ்ரீ வித்யாவையும் கடுமையாக சாடியுள்ளார்.

இவ்வாறாக நடிகை கஸ்தூரி பற்றி முக்தார் மற்றும் திராவிட கழக பேச்சாளர் ஸ்ரீவித்யா அவதூறாக பேசியதை எதிர்த்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டரில் இவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சித்து அசிங்கப்படுத்தியது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஸ்ரீவித்யா வீடியோவில் பலரை விமர்சித்து பேசிவரும் நிலையில் இப்படி கஸ்தூரியிடம் சமூக வலைத்தளத்தில் சிக்கி விமர்சனத்திற்குள்ளானது இணையத்தில் அதிகம் வைரலாகிறது.