24 special

வாயை கொடுத்து வம்பில் சிக்கிய ஆர்.எஸ். பாரதி.... இத்தனை நாள் ஊதியது எல்லாம் வீணாக போச்சே!

Rs bharathi and annamalai
Rs bharathi and annamalai

ஒரே பேட்டி மூலம் இத்தனை நாள் ஊடகங்கள், முன்னணி பத்திரிகையாளர்கள் ஆகியோர் இணைந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் நாகரீக பாடம் எடுத்தது அத்தனையும் முடிவிற்கு வந்து இருக்கிறது.


திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பொதுகூட்டம் ஒன்றில் பேசுகையில், "திருவாருர் வீதியிலே வந்து கருணாநிதி பெயரை சூட்டக்கூடாது என்று சொல்லி விட்டு உதை வாங்காது போயிருக்கிறான் என்று சொன்னால் அதை கண்டு வெட்கப்படுகிறேன், நான் வேதனை படுகிறேன், இந்த மாநாடு அந்த உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என அண்ணாமலை குறித்து சர்ச்சையாக பேசி இருந்தார்.

இதற்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்,பாஜகவை சேர்ந்த மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, "அண்ணாமலையை பார்த்து நடுநடுங்கி, அச்சத்தில் உளறி கொட்டும் ஆர் எஸ் பாரதி அவர்களே, அண்ணாமலை மீது கை வைத்து பாருங்கள். இன்னும்  வேதனைப்படுவீர்கள். இந்த மிரட்டல்களையெல்லாம் வேறு எங்காவது வைத்து கொள்ளுங்கள். வன்முறையை தூண்டுவதை விட்டு விடுங்கள் இல்லையேல் மேலும் வெட்கப்படுவீர்கள்." என பதிலடி கொடுத்து இருக்கிறார்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னை ஆடு என விமர்சனம் செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்தார் இறுதியில் அடித்தால் திருப்பி அடிப்பேன் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். இதனை பலரும் அரசியல் நாகரீகமற்ற பேச்சு என குறிப்பிட்டனர்.

ஊடகங்களும் முன்னின்று விவாதம் நடத்தின ஆனால் தற்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உதைக்காமல் விட்டது, ஏன் என கேள்வி எழுப்பி இருப்பது இத்தனை நாள் அண்ணாமலைக்கு அரசியல் நாகரீக பாடம் எடுத்த அனைவரின் முகத்திரையை கிழித்துள்ளது, அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்த பலர் இப்போது ஆர். எஸ் பாரதி பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் மக்களிடம் அம்பலபட்டு போவது உறுதி. ஆர். எஸ். பாரதி பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது..!