Tamilnadu

SBI பகீர் அறிக்கை...!!வரப்போவது மூன்றாவது அலையா இல்லை மூன்றாம் உலகயுத்தமா..!??

sbi report third wave
sbi report third wave

SBI பகீர் அறிக்கை...!!வரப்போவது மூன்றாவது அலையா இல்லை மூன்றாம் உலகயுத்தமா..!??


இந்தியாவில்கடந்த சில வாரங்களாக சீனத்தொற்று தினசரி குறைந்து வரும் நிலையில், வரப்போகும் மூன்றாவது அலை குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர், இந்திய மக்கள்தொகையில் இதுவரை சுமார் 3.2 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்..

கடந்தஇரண்டு மாதங்களுக்குள், இந்தியாவின் மொத்த கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.கொரோனா வைரஸ் நோயின் (கோவிட் -19) தொற்றுநோயின் மூன்றாவது அலைகளின் தாக்கம் கடுமையானதாகஇருக்கும்..

தடுப்பூசி மற்றும் சிறந்த சுகாதார உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் கணிசமாகக் குறைக்கப்படலாம் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ஆராய்ச்சி ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி, தனது ஐந்து பக்க நீள அறிக்கையில், மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தொற்றுநோயின் மூன்றாவது அலையின் சராசரி காலம் 98 நாட்கள் ஆகும், இது இரண்டாவது அலையின் போது 108 நாட்களாகும்.சர்வதேச நிலைமையை மேற்கோள் காட்டி, மூன்றாவது அலையின் தீவிரம் இரண்டாவது அலைகளைப் போலவே கடுமையாக இருக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் மூன்றாவது அலைகளில், நாம் தயாராக இருந்தால், தீவிர நோய்த்தொற்று சதவிகிதத்தின் சரிவு குறைந்த எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு வழிவகுக்கும்" என்றும் எஸ்பிஐ ஆராய்ச்சி ஆவணம் பரிந்துரைத்துள்ளது..

ஆதாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் சுமார் 162,000 பேர் மார்ச் இறுதி வரை சீனத்தொற்றுக்கு உயிரை இழந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்குள், இறப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது,

மொத்த கோவிட் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 330,000 க்கும் அதிகமாக உள்ளது. இரண்டாவது அலையின் போது கோவிட் நிகழ்வுகளின் அதிவேக உயர்வு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை திணறடித்தது, இது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.

கடந்த சில வாரங்களாக தினசரி புதிய கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், சாத்தியமான மூன்றாவது அலை குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்திய மக்கள்தொகையில் சுமார் 3.2 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்றுநோய்க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

எஸ்பிஐ அறிக்கையின்படி, "சிறந்த சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் கடுமையான தடுப்பூசி மூன்றாவது அலைகளின் போது கடுமையான கோவிட் வழக்குகள் 20% சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாகக் குறைய வழிவகுக்கும், கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளை 17 லட்சத்திலிருந்து 40,000 ஆகக் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்." என SBI தனது அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு அனுப்பும் தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் ஐந்தாவது இடம்..மத்திய அரசு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் எதிர்கட்சிகள் தங்களது அரசியல் ஆதாயத்திற்க்காக தடுப்பூசி பற்றிய எதிர்ரமறையான கருத்துகளை மக்களிடம் பரப்புகின்றனர். ஆகவே மக்கள் தடுப்பூசி எடுத்து கொள்ள தயங்கி வருகின்றனர் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

...உங்கள் பீமா.