World

கன்னத்தில் பளார்...குறித்து ராமதாஸ் என்ன சொல்கிறார் பாருங்கள்..!

Wil smith and ramadas
Wil smith and ramadas

சபாஷ்.... சரியான தண்டனை என வில் ஸ்மித் நகைச்சுவை நடிகரை கன்னத்தில் அறைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-


ஹாலிவுட் டால்பி திரையரங்கத்தில் இந்திய நேரப்படி இன்று காலை அகாடமி விருது (ஆஸ்கர் விருது) வழங்கும்  விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது.  சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக கிரிஸ் ராக் என்ற நகைச்சுவை நடிகர் மேடையேறினார். 

அப்போது நகைச்சுவை செய்வதாக நினைத்துக் கொண்டு,  நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட்டின் தலைமுடி பிரச்சினையை கிண்டல் செய்தார். ஜடாவுக்கு alopecia என்ற முடி உதிரும் நோய் இருக்கிறது. கிரிஸ்ராக்கின் நகைச்சுவைக்கு பெரிய வரவேற்பு இல்லை. வில்ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுவதால் அதை வாங்குவதற்காக வந்திருந்தார். 

கிரிஸ் ராக்கின் நகைச்சுவையைக் கேட்டு வில்ஸ்மித் ஆரம்பத்தில் சிறிது சிரித்தார். ஆனால், அருகிலிருந்து அவரது மனைவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைப் பார்த்து கொதித்துப் போனார்.

உடனடியாக மேடையில் ஏறிய  வில் ஸ்மித் கிரிஸ்ராக்கின் கன்னத்தில் பளார் என அறைந்திருக்கிறார்.  அவை நாகரிகத்தையெல்லாம்  விடுங்கள். வில் ஸ்மித்தின் செயல் மிகவும் சரியானது. கிரிஸ்ராக்கின் செயலுக்கு உடனடியாக சரியான தண்டனை கொடுத்திருக்கிறார். 

அதுமட்டுமல்ல  ஜடாவை தாம் கிண்டல் செய்ததில் உள்நோக்கமில்லை என்று கிரிஸ்ராக் விளக்கமளித்த போது அதை ஸ்மித் ரசிக்கவில்லை. அப்போதும் கூட என் மனைவியின் பெயரை உச்சரிக்கக்கூட உனக்குத் தகுதியில்லை என்று பொங்கியிருக்கிறார். அவர் உண்மையான கதாநாயகன். 

இந்த நிகழ்வு சொல்லியிருப்பது இரண்டு உண்மைகளை...1. ஒருவரின் ஊனத்தை, குறையை நகைச்சுவைக்கான கருப்பொருளாக்காதீர்கள். 2. மனைவியையும், அவரது உணர்வையும் மதித்தால் உலகம் உங்களை மதிக்கும் என குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.