24 special

விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் சீமான் பேசியது....கொந்தளிப்பில் ரசிகர்கள்!

Seeman, Vijayakanth
Seeman, Vijayakanth

தேமுதிக கட்சியின் தலைவரும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை உடல்நல பிரச்சனை காரணமாக காலமானார். நேற்று செய்தி அறிந்த மொத்த தமிழ்நாட்டு மக்களும் சென்னைக்கு படையெடுத்தனர். இதனால் மக்களை கட்டுப்படுத்தாமல் தேமுதிக அலுவலகத்தில் இருந்து சென்னை தீவு திடலில் உடலை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 


விஜயகாந்தின் உடலுக்கு காலையில் இருந்து பல சினிமா நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "விஜயகாந்த் என்றால் துணிவுதான். அவருடைய தவசி படத்துக்கு நான் உரையாடல் எழுதினேன். அப்போதுதான் அவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது" என தெரிவித்தார். இதையடுத்து, 2001ல் வெளியான "தவசி" திரைப்படத்திற்கு படத்தின் இயக்குநர் உதயசங்கர் தான் வசனம் எழுதினார் என்பதை படம் எடுத்து வெளியிட்டு சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அதில் "வசனம் - சீமான்" என அத்திரைப்படத்தில் எங்குமே இல்லாததை சுட்டி காட்டும் விமர்சகர்கள், 2023 ஜனவரி மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் திருமகன் காலமான போதும், இரங்கல் தெரிவிக்கும் போது, "நாம் தமிழர் கட்சியில் சேர திருமகன் விரும்பினார்" என சீமான் சர்ச்சையை கிளப்பியதை குறிப்பிடுகின்றனர். இரங்கல் தெரிவிக்கும் செய்தியில் சர்ச்சையை கிளப்புவது சீமானுக்கு வாடிக்கையாகி உள்ளதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், எதில் எதில் அரசியல் செய்வது என சீமான் தெரியாமல் பொய் சொல்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.