24 special

வணக்கம் டா மாப்ள.....! வடிவேலுவை கிழித்து எடுத்த தேனி நபரின் வீடியோ வைரல்...

vadivelu, vijayakanth
vadivelu, vijayakanth

கேப்டன் விஜயகாந்த் மறைந்த செய்தி நேற்று முதல் தமிழகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் இறந்ததற்கு பின்னர் ஒரு திரையுலகை சார்ந்தவர் அதிலும் குறிப்பாக அரசியல் ஈடுபட்டவர் மரணம் தமிழகத்தை உலுக்கியது என்றால் அது விஜயகாந்த் அவர்களின் மரணம்தான்.இந்த விஜயகாந்த் அவர்களின் மரணத்தை மையப்படுத்தி பல்வேறு கருத்துக்கள் மற்றும் பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன, அதில் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கும் விமர்சனங்கள் என்றால் வடிவேலு செய்த நம்பிக்கை துரோகம் மற்றும் வடிவேலு செய்த கீழ்த்தரமான செயலை தான் குறிப்பிடுகிறது.ஆரம்ப கட்டத்தில் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்து வடிவேலுக்கு உடுத்திக் கொள்ள துணி எல்லாம் கொடுத்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியல் ஆரம்பிக்கும்போது திமுகவுடன் கூட்டு வைத்துக்கொண்டு வடிவேலு அவரை கண்ணா பின்னா என  ஏக வசனத்தில் பேசி மரியாதை இல்லாமல் மேடைகளில் கீழ்த்தரமாக பேசி வந்ததைத்தான் தற்பொழுது அனைவரும் குறிப்பிட்டு கூறுகின்றனர்.


வடிவேலு கீழ்த்தரமாக விஜயகாந்தை பேசினாலும் விஜயகாந்த் வடிவேலுவை என்றுமே திட்டியதே கிடையாதாம், அது மட்டுமல்லாமல் விஜயகாந்த் வடிவேலுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும்பொழுது 'நல்ல கலைஞன்யா வாய்ப்பு கொடுங்க! பாவம் பொழச்சிட்டு போகட்டும்' என மனித தன்மையுடன் விஜயகாந்த் கூறி உள்ளார். இந்த செய்தி தான் கடந்த இரு தினங்களாக சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது, பொதுமக்கள் பலரும் வடிவேலு போன்ற மனிதனைப் பார்த்ததே கிடையாது என கேவலமாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் வணக்கம் டா மாப்பிள்ளை தேனில் இருந்து பேசுறேன் என பேசும் நபர் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நீ எல்லாம் மனுஷன் கிடையாது என்கின்ற ரேஞ்சிக்கு வடிவேலுவை குறி வைத்து அவர் பேசிய பேச்சுக்கள் மற்றும் கேட்ட கேள்விகள் அனைத்தும் ஆமாம் கரெக்ட் தான் என்பது போன்ற பல விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படி விஜயகாந்த் என்றால் வடிவேலு செய்த துரோகம் தான் ஞாபகத்துக்கு வரும் எனும் அளவிற்கு வடிவேலுவின் பெயர் விஜயகாந்த் மறைவில் பொதுமக்கள் மத்தியில் அம்பலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.