24 special

அடுத்த சர்ச்சையில் சிக்கிய செந்தில் பாலாஜி...!இது என்ன புது கதையா இருக்கு

Mk stalin, senthil balaji
Mk stalin, senthil balaji

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக செந்தில் பாலாஜி பெயர் மிக பெரிய அளவில் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது அதற்கு செந்தில் பாலாஜி கொடுத்த இரண்டு முக்கியமான பேட்டிகள் தான் காரணமாக பார்க்க படுகிறது.


ஒன்று டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக வசூல் செய்யப்படும் 10 ரூபாய் வருமானம் மற்றொன்று செந்தில் பாலாஜி மீதான லஞ்ச புகார் வழக்கில் அவர் கொடுத்த பேட்டி இந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த போது பேசிய பேச்சுக்களை அப்படியே நெட்டிசன்கள் பதிவு செய்ய கடும் விவாதம் கிளம்பி இருக்கிறது.

கருப்பு சட்டையுடன் தனது வீட்டு வாசலில் நின்ற செந்தில் பாலாஜி கொத்து கொத்தாக மக்கள் சாகும் போது மந்திரிகள் கல்லா கட்ட டாஸ்மாக் ஒரு கேடா என கோசம் போட்டார் அருகே நின்ற ஜோதிமணியும் அதற்கு கோரஸ் போட்டு இருக்கிறார்.  இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள் தற்போது செந்தில் பாலாஜியை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர்.

செந்தில் பாலாஜி அவர்களே அன்று கோசம் போட்டீர்கள் இன்று நீங்களே அதே துறைக்கு மந்திரியாக இருக்கிறீர்கள், கள்ள சாராய விவகாரத்தில் கொத்து கொத்தாக மக்கள் செத்த போது இப்போது டாஸ்மாக் ஒரு கேடா, அந்த துறைக்கு மந்திரி ஒரு கேடா என செந்தில் பாலாஜி பேசிய வார்த்தைகளை வைத்தே இப்போது அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பேச்சு என்பது இன்றைய கால கட்டத்தில் எந்த அமைச்சருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயம் செந்தில் பாலாஜிக்கு பொருந்துகிறது என நெட்டிசன்கள் தற்போது வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.