24 special

இதுவரை வெளியிடாத தனது மனைவி குறித்து பரபரப்பான தகவலை வெளியிட்ட சிங்கம் புலி!!

singampuli ajith
singampuli ajith

தற்போது தமிழ் சினிமா முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிற ஒரு நடிகர் என்றால் அவர் சிங்கம் புலி தான்!  இவர் தேனி பெரிய குளத்து பகுதியைச் சேர்ந்தவர் பெங்களூரில் தனது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு திரைப்படத் தொழிலில் சாதிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்து சுந்தர் சி யுடன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 18 படங்களுக்கு சுந்தர் சி யின் உதவி இயக்குனராகவே பணியாற்றிய சிங்கம் புலி அஜித்தை வைத்து ரெட் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் வெளியான பொழுது கலவையான விமர்சனங்களை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸில் சராசரியான வருமானத்தை பெற்று கொடுத்தது. ஆனால் தற்போது விஜய்யின் ரெட் படத்தை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பல சினிமா விரும்பிகள் தேடி பார்த்து கொண்டாடி வருகின்றனர். இதனை அடுத்து 2005 ஆம் ஆண்டில் சூர்யா மற்றும் ஜோதிகாவை வைத்து நகைச்சுவை கலந்த படமான மாயாவி என்ற படத்தை உருவாக்கினார். சுந்தர் சியை அடுத்து இயக்குனர் பாலாவிடமும் துணை இயக்குனராக பணியாற்றி உள்ளார் மேலும் இயக்குனர் பாலா தான் அரை நான் கடவுள் என்ற படத்தில் சிங்கம் புலியை பிச்சைக்காரனாக நடிக்க வைத்து திரையில் அறிமுகப்படுத்தினார். 


இதனை அடுத்து மாயாண்டி குடும்பத்தார் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட  நபராக நடித்து காமெடியில் பிச்சு உதறி இருப்பார். அதற்குப் பிறகு தொடர்ச்சியாகவே சிங்கம் புலிக்கு காமெடி கதாபாத்திரங்கள் மட்டுமே வர தொடங்கியது. அதனால் மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா ஆகிய இரு படங்களில் முக்கிய காமெடி ரோலிங் நடித்து மக்கள் அனைவரையுமே வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். அதுமட்டுமின்றி நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்ற திரைப்படத்திலும், அரண்மனை படத்தின் நான்காம் பாகத்திலும் போலீஸ் வேடத்தில் நடித்து கலக்கியிருபார். இப்படி தொடர்ச்சியாகவே குணச்சித்திர வேடங்கள் மற்றும் காமெடி நடிகனாக வலம் வந்து கொண்டிருந்த சிங்கம் புலி மகாராஜா திரைப்படத்தில் இதுவரை தான் காட்டிய முகத்தை காட்டாமல் ஒரு மாறுபட்ட முகத்தை காட்டி பார்வையாளர்கள் அனைவரையுமே ஆச்சரியத்தில் தள்ளினார். 

இதனை அடுத்து மகாராஜா திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பால் பல பேட்டிகளை கொடுத்து வரும் சிங்கம் புலி சமீபத்தில் தனது மனைவி ராணுவத்தில் இருக்கிறார் என்று தகவலை கூறியிருக்கிறார். அதாவது என்னுடைய மனைவி ஆர்மியில் கர்னலாக இருக்கிறார். நான் அவளை திருமணம் செய்து கொள்ளும் பொழுது கேப்டனாக இருந்தாள். கார்கில் வார் நடந்த பொழுதிலிருந்து அவள் ராணுவத்தில் இருக்கிறார். அந்தப் போருக்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என்று அரசு தரப்பில் கேட்கப்பட்டதற்கு எனது தாய் தந்தையுடன் இருக்க வேண்டும் என்று அந்தமானில் தான் தனது பணியை அமர்த்தும்படி கேட்டுள்ளார். 

ஏனென்றால் என் மனைவி அந்தமானைச் சேர்ந்தவர். மேலும் அவள் என்னுடைய முறை பொண்ணு! அதற்குப் பிறகு திரிபுரா, பூனே, ராஞ்சி, டேராடூன், கேண்டாக், ஹைதராபாத் தற்போது ஜபல்பூர் என்று தனது மனைவி இத்தனை ஆண்டு காலமாக ராணுவத்தில் பணியாற்றியது இது குறித்து கூறியுள்ளார். மேலும் தனது மனைவி பெரும்பாலும் தமிழ் படங்கள் பார்ப்பதில்லை என்றும் ஆனால் எனக்கு மிகவும் உறுதுணையாக அவர் இருந்துள்ளார் என்றும் கூறியுள்ளார் சிங்கம் புலி. இதுவரை வெறும் காமெடி நடிகனாகவே பார்க்கப்பட்ட இவருக்கு பின்னால் இப்படி பல முகங்கள் இருக்கிறது என்று தகவல் தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது இதனால் சிங்கம் புலி குறித்த பேச்சுக்கள் இணையத்தில் அதிகமாக உலா வருகிறது.