24 special

ஓடி வந்து உதவிய சிவகார்த்திகேயன்!! நெகிழ்ச்சியில் ராசு மதுரவனின் மனைவி!!

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல திரைப்படங்களை நடித்து தற்பொழுது முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன்!! சினிமாவில் நடிகராக ஆகுவதற்கு முன்பாகவே பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் இருந்து வந்துள்ளார். அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தனது திறமையால் இன்று வளர்ந்து முன்னணி நடிகர்களுடன் அவர்களுக்கு இணையாக பல திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார். சினிமாவில் உச்சிக்கு சென்றுவிட்டாலும் கூட தொடர்ந்து பலருக்கு உதவி செய்து வருகிறார். மேலும் சமீபத்தில் கூட நெல்லை பாதுகாக்கும் ஜெயராம் உடல்நிலைக்கு போராடி வந்த நிலையில் அவரின் மருத்துவ செலவிற்கு சிவகார்த்திகேயன் உதவி செய்தார். 


ஆனால் உடல்நிலை குறைவில் அவர் உயிர் இழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து தேசிய நெல் திருவிழா நடக்கும்பொழுது கண்டிப்பாக அதில் பங்கேற்பேன் என்று கூறியிருந்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடந்த திருவிழாவில் சொல்லியது போலவே கலந்துகொண்டு தனது பங்களிப்பை அளித்தார். இதனைத் தொடர்ந்து சொன்னதை சொல்லிய படியே காப்பாற்றி விட்டார் என்று பலரும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். மட்டுமல்லாமல் படிக்கும்  மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது மற்றொரு பிரபலத்தின் குடும்பத்திற்கு தற்பொழுது உதவி கரத்தை நீட்டி உள்ளார். அது குறித்த செய்திகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

பிரபல இயக்குனராக இருந்து மறைந்த இயக்குனர் தான் ராசு மதுரவன்!! இவர் மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று வந்த திரைப்படமாகவே இருந்து வருகிறது. மேலும் இவரின் திரைப்படங்கள் அனைத்துமே இன்றைய இளைஞர்கள் மத்தியில் ரசித்துப் பார்க்கக் கூடிய வகையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டில் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு தனது 49 வது வயதிலேயே மரணம் அடைந்து விட்டார். 

மேலும் இவருக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்ததால் தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு உடல்நல குறைவு காரணமாக இறந்து விட்டார் என்ற செய்தியும் பரவி வந்தது. இந்த நிலையில் இவர் இறந்து பத்து வருடங்கள் கழிந்த நிலையில் இவருடைய குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக சமீபத்தில் ராசு மதுரவனின் மனைவி பவானி அளித்த பேட்டியில் கூறியிருந்தார். மேலும் தன்னுடைய கணவர் உயிருடன் இருந்திருந்தால் தன் மகள்களின் கல்வி நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். என்னைத் தொடர்ந்து திடீரென்று புற்றுநோய் ஏற்பட்டு திடீரென்று இறந்து விடுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் வைத்திருந்த பணம் முழுக்க அவருடைய மருத்துவ செலவுக்கு சரியாகிவிட்டது. தற்பொழுது தன்னிடம் பணமே இல்லை என்று கூறியதோடு தனது இரண்டு மகள்களும் பள்ளி படிக்கின்றனர். 

உதவி செய்வதற்கு கூட யாருமே கிடையாது என்று கூறியதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இந்த செய்தியை அறிந்து ராசுவின் இரண்டு மகள்களில் கல்வி கட்டணம் 97 ஆயிரம் ரூபாய்  உதவி அளித்திருக்கிறார் என்று செய்திகள் பரவி வருகிறது. மீடியாவில் இருக்கும் பலரும் இதனால் வரை எங்களுக்கு என்னவானது என்று கூட விசாரிக்க வந்தது கிடையாது. மேலும் எனது கணவரின் திரைப்படங்களில் சேர்ந்து பணியாற்றிய பிரபலங்கள் கூட இதுவரை ஆதரவளிக்கவில்லை. ஆனால் எந்தவித சம்பந்தமும் இல்லாத சிவகார்த்திகேயன் தற்பொழுது தங்களுக்கு உதவி செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று பேட்டியில் கூறி சிவகார்த்திகேயன் சார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர்களிடம் பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரின் படத்தில் நடித்து இப்போ அரசியலில் தீவிரமாக இருக்கும் சீமான் கூட எதுவும் உதவி செய்யவில்லலை ஆனால் அவர் படத்தில் நடிக்காத சிவகார்த்திகேயன் உதவி செய்துள்ளார் பாருங்கள் யார் எப்படிப்பட்டவர் என இணையத்தில் கமெண்டுகள் பறக்கிறது....