24 special

சிக்கிய முக்கிய புள்ளி!

nogoretharka, muhamad kalipha sahip
nogoretharka, muhamad kalipha sahip

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு திருத்தலங்கள் மிக முக்கியமாக கருதப்படும் நாட்டின் பல பகுதிகள் இருக்கலாம் அதே சமயத்தில் தமிழகத்திற்குள்ளும் ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட மற்றும் பிரபலமான திருத்தலங்கள் இருக்கும், அப்படி இஸ்லாமியர்களுக்கு தமிழக சுற்றுவட்டாரத்தில் மிக முக்கிய ஆன்மீக இடமாக கருதப்படுவது நாகூர் அப்பகுதி முழுவதுமே இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருவார்கள். நாகூர் சந்தனக்கூடு விழா என்பதும் மிகவும் விமர்சியாக கொண்டாடப்படுவது. அப்படிப்பட்ட நாகூர் தர்காவில் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவராக இருக்கும் பொறுப்பு என்பது மிகவும் உயர்ந்தது மிகவும் புனிதமானது கூட ஆனால் நாகூர் தர்காவில் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவராக இருக்கும் செயது முகமது கலீபா சாஹிப் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணை ஏமாற்றியுள்ள விவகாரம் தற்போது வெளியாகி உள்ளது. மிகவும் பிரபலமான நாகூர் தர்கா ஆலோசனைக் கூட்டத்தின் தலைவராக இருக்கும் சையது முகமது கலிபா சாகித் அரசியல் வட்டாரங்களிலும் பல திரையுலக பிரபலங்களிடமும் நெருக்கமாக பழகி வருபவர்.


மேலும் தற்போது இவரது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் மிகவும் விமர்சியாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கலிபா தன்னை ஏமாற்றி விட்டதாக கேரளத்தை சேர்ந்த ஹப்ஷா என்ற பெண் தமிழ்நாடு சிறுபான்மை நல ஆலய உறுப்பினர் சமீம் அன்சாரியை சந்தித்து புகார் அளித்துள்ளார். மேலும் கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் முகமது காலி குறித்து புகார் அளிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவில் சந்தனக்கூடு விழாவில் கலந்து கொள்வதற்காக அடிக்கடி மலபுரம் வரும் முகமது கலிபா தங்கள் வீட்டுக்கு வருவதாகவும் தனது குடும்பத்தினருடன் அவர் மிகவும் நெருங்கி பழகுவார் என்பதால் எங்களது குடும்பத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். அப்படியே அவர் எனது வீட்டிற்கு அடிக்கடி வருவதற்கு பிறகு இருவரும் பேசிக்கொள்ள ஆரம்பித்தும் அந்த சமயத்தில் கலீபா தன் மனைவி வேறொருவன் தொடர்பு வைத்துக்கொண்டு என்னை விட்டு பிரிந்து விட்டார் நான் தனிமையில் மிகவும் வாடுகிறேன் என்று கூறியதாகவும் அதனால் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். அவர் இப்படி கூறும் பொழுது அவருடைய சிச்சுவேஷனையும் பாதிப்பையும் நான் உணர்ந்து கொண்டேன். 

ஆனால் கலிபா அவரது குடும்பத்தினருடன் நல்லபடியாக வாழ்ந்து வருவதாக அவரது சகோதரர்களே கூறிய பொழுது அதைக் குறித்து நான் கலிபாவிடம் கேட்டேன் அதற்கு கலிபா படுக்கை அறையில் இருந்து கொண்டு அவை அனைத்தும் உண்மையே இல்லை நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் என் குடும்பத்தினருடன் நல்லபடியாக வாழவில்லை என்று அல்லாஹ் மீது சத்தியம் செய்தார், மேலும் நம்மளோட லைஃப் ரொம்ப சூப்பரா இருக்க போகுது நம்ம நல்லா வாழ போறோம் என்று சென்னையில் வைத்து என்னிடம் கூறினார், இதனாலே நான் அவரை நம்ப ஆரம்பித்தேன் ஆனால் இப்பொழுது அவர் கூறியது அனைத்தும் பொய் என்று எனக்கு தெரிய வருகிறது என்று தனது குழந்தைகளுடன் புலம்பியுள்ளார் அப்சா! ஆனால் தற்பொழுது கலிபாவின் மகள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கலிபா கேரளா பெண்ணுடன் இருந்த குறித்தும் கேரள பெண் கலிபா மீது திடிக்கிடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது நாகூர் வட்டார முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.