24 special

முருகனின் நான்காவது வீடான சுவாமி மலையில் இப்படி ஒரு மாநாடா?? வேற லெவல் சம்பவம் செய்யப்போகும் அர்ஜுன் சம்பத்...

arjunsampath
arjunsampath

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் கடவுள் மறுப்பு, கடவுள் நம்பிக்கை கிடையாது, கடவுள் என்பவர் யார் என்று ஈவேராவின் கோட்பாடுகளை தழுவி நிறைய திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகி வருகிறது. மேலும் இந்த கோட்பாடுகளை பின்பற்றி ஜாதி போன்றவற்றை மையமாகக் கொண்டும் தொடர்ந்து பல திரைப்படங்களை உருவாக்கி வருகின்றனர். மேலும் சில ஜாதி சமூகத்தை சேர்ந்த இயக்குனர்கள் அவர்களின் குறிப்பிட்ட ஜாதி வட்டாரங்களில் உள்ள கதைகளை தழுவி அவற்றை நன்றாக உயர்த்தி காட்டி கதைகளை எடுத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இதுபோன்று ஜாதியை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் அந்தக் குறிப்பிட்ட ஜாதியில் உள்ள நடிகர் மற்றும் கலைஞர்களையே வைத்து திரைப்படங்களை எடுத்த வருகின்றனர் என்ற பேச்சும் தொடர்ந்து எழுந்து வருகிறது. 


இவை அனைத்துமே திமுகவின் சாயலை வெளிப்படுத்துகிறது. ஏனென்றால் திமுகவும் இதே போன்று கருத்துக்களை தான் தனது கட்சியில் எடுத்துக்கொண்டு வருகிறது. தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, சனாதன கொள்கைக்கு எதிராக கருத்துக்களை கூறி வருவது, கடவுள் மறுப்பு, இந்து சமய கொள்கைகளுக்கு எதிராக பேசி வருவது  போன்ற பல செயல்கள் இதே போன்று இருப்பதால் இது போன்ற திரைப்படங்களுக்கும் திமுகவிற்கும் ஒரே கருத்து நிகழ்வது போன்ற மனநிலை வெளிப்படுகிறது. ஆனால் இது போன்று தொடர்ந்து எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கோவிலுக்கும் சென்று வரும் செய்திகளையும் பார்க்க முடிகிறது. வீட்டில் உள்ள அனைவருமே மகன் மருமகள் குழந்தைகள் என அனைவருமே கோவில்களுக்கு சென்று வருவதை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் சமீப காலமாகவே சில சினிமா வட்டாரங்கள் இந்து மதத்தின் மீதும், இந்து கடவுள்கள் மீது உள்ள நம்பிக்கையையும் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றனர். மேலும் விஜயின் தந்தை சந்திரசேகர், லிவிங்ஸ்டன் போன்றோர் தொடர்ந்து செயல்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. இதனைத் தொடர்ந்து மற்றொரு பிரபலமான வையாபுரி தற்பொழுது இந்து மதத்திற்கு சார்ந்த வீடியோ ஒன்றை பதிவிட்டு அது தற்பொழுது வைரலாகி வருகிறது. வையாபுரி பொதுவாகவே இந்து மதத்திற்கும் கடவுள் நம்பிக்கையை கொண்ட ஒருவராக இருந்து வருவார். ஆனால் தற்பொழுது வீடியோவில் அனைவரையுமே தரிசிக்க வருமாறு கூறியுள்ளார்..

வரும் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் சிறப்பான பொதுக்கூட்டம், கருத்தரங்கம் மற்றும் கிரிவலம் போன்ற அனைத்துமே நடைபெறப் போகிறது. இது முருகா பக்தர்கள் அனைவருமே கலந்து கொள்ள வேண்டும். மேலும் இதில் ஆன்மீக குருமார்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் அனைவருமே கலந்து கொள்ள போகிறார்கள். 

இதனைத் தொடர்ந்து உங்கள் அனைவரையும் வரவேற்பு நாங்கள் அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்!! எல்லோருமே வாருங்கள் முருகனின் அருளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று வையாபுரி இந்த வீடியோவில் கூறியுள்ளார்!! மேலும் இந்த மாநாடானது காலை 9:00 மணி முதல் இரவு 9 மணி வரை முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது வீடான சுவாமி மலையில் நடக்கப் போகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் முன்னெடுக்கிறார்... இதனைத் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வரும் நேரத்தில் இது போன்ற மாநாடு குறித்து வையாபுரி பேசியுள்ள வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை பெறுவதோடு  இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையையும் ஏற்படுத்தி வருகிறது.