24 special

போட்ட போடில் வாய் மூடி அமைதியாக இருந்த "ஆர். கே" குறுக்க பாய்ந்த தம்பி தமிழரசன் !


தனியார் ஊடகத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சி வைரலாக பரவி வருகிறது, அரசியல் விமர்சகர் ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் ஆர். கே மற்றும் தம்பி தமிழரசன் ஆகியோர் அமைதியாக இருந்தது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


கடந்த வாரம் கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா.அப்போது சக பங்கேற்பாளர் சிவலிங்கம் குறித்து சர்ச்சையாக பேச நுபூர் சர்மா  நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

தொடர்ந்து தொழிலதிபரும் பாஜக பிரமுகருமான நவீன் ஜிண்டால் ட்விட்டரில் சட்வீட்டை பதிவிட்டார். பின்னர் அந்த கருத்தை நீக்கினார். இதனைக் கண்டித்து கான்பூரில் நடந்த போராட்டம் வன்முறையானது. இது தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கான்பூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த சூழலில் இது குறித்த விவாதம் தமிழ் ஊடகம் ஒன்றில் நடைபெற்றது அப்போது பேசிய ஸ்ரீனிவாசன், இந்து மதம் இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சையாக பேசியவர்களுக்கு எந்த இஸ்லாமிய அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள் கூறுங்கள், அது என்ன வெறுப்பு பேச்சில் இரு அளவீடு என பல எடுத்து காட்டுக்களை கூறினார்.

இந்த கேள்விகளுக்கு குறுக்கே குறுக்கே நெறியாளர் தம்பி தமிழரசன் கேள்வி எழுப்ப அதற்கு ஸ்ரீனிவாசன் கொடுத்த பதிலடியில் அவரும் பதில் கொடுக்க முடியாமல் அமைதியாகிவிட்டார். வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.