24 special

முடிவுதானாம் சென்னையில் பேரணியை முடித்துவிட்டு அண்ணாமலை போட்ட பதிவு !

annamalai bjp
annamalai bjp

சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற மிக பெரிய பேரணி பெரும் பேசு பொருளாக மாறிய நிலையில் அந்த பேரணியை முடித்து கொண்டு அண்ணாமலை தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு :-


இந்த திமுக அரசின் மக்கள் விரோத போக்கை முறியடிக்கக் கோட்டையை நோக்கிய நமது பயணத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெள்ளமாகத் திரண்டு வந்த நம் கட்சி தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் தமிழக பாஜக சார்பாக எங்களது நன்றிகள்.

வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றியைப் பெற்றுவிட்டு இன்று வீணாகச் சப்பை கட்டுக் கட்டுவதை இந்த அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.  பெட்ரோல் விலையை 2₹, டீசல் விலையை 4₹ மற்றும் சமையல் எரிவாயு சிலின்டருக்கு 100₹ மானியம் ஆகிய தேர்தல் வாக்குறுதியில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஒரு வருடத்திற்குள் பெட்ரோல் விலையை 14.5 ரூபாயும் டீசல் விலையை 17 ரூபாயும் குறைத்துள்ளது. இதன் பின்னும் திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் இம்மாதம் 25ஆம் தேதி அனைத்து மாவட்டத்திலும்.

ஒரு நாள் சத்தியாகிரக போராட்டத்தில் பாஜகவின் வின் அனைத்து தொண்டர்களும் ஈடுபடுவர். அதற்குப் பின் திருச்சியில் மாபெரும் போராட்டத்தில் எங்களது தொண்டர்கள் திரளாகப் பங்கேற்பர். இந்த மாபெரும் போராட்டம் திமுகவின் முடிவுரைக்கு ஆரம்பமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை .