24 special

தோல்வி கற்றுக் கொடுத்த பாடம் அந்தர் பல்டி அடித்த கே. சி. ஆர் மகள்!

kcr kavitha
kcr kavitha

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அரை இறுதி போட்டியாக கருதப்பட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளில் நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியானது அதில் உத்திர பிரதேசம் சத்தீஸ்கர் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது அதுவும் ஏற்கனவே ஆட்சியில் இருந்த உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக மீண்டும் தனது ஆட்சியை உறுதி செய்ததோடு காங்கிரஸின் வசம் இருந்தால் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரை தன்வசமாக்கியுள்ளது.  இந்த தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த காங்கிரஸ் தெலுங்கானாவில் மட்டும் ஆட்சி அமைத்தது. தெலுங்கானாவில் இதற்கு முன்பாக கே சி ஆர் ஆட்சி இருந்ததும், கே சி ஆர் போட்டியிட்ட தொகுதியில் பாஜக வேட்பாளர் அவரை தோற்கடித்ததும் அரசியல் வட்டாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.அதுமட்டுமின்றி பாஜகவை ஒழித்தாக வேண்டும் என்ற நோக்கத்தை மையப்படுத்தி உண்டான 26 எதிர்க்கட்சிகளின் I.N.D.I கூட்டணியில் பாஜகவின் வெற்றியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


மேலும் தெலுங்கானாவில் தனது ஆட்சியை இழந்து தான் நின்ற தொகுதியையும் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதால் பெரிதும் சிரமத்திற்கு தள்ளப்பட்டது கே சி ஆர் குடும்பம். அதாவது ராஷ்டிர சமிதி என்ற மாநில கட்சியை நிறுவி தலைவராக இருந்து வரும் கல்வகுந்த்லா சந்திரசேகர் ராவ் 2014 ஆம் ஆண்டு முதல் 2023 வரை தெலுங்கானாவில் முதல்வராக ஆட்சி பொறுப்பில் இருந்தவர். முன்னதாக 24 இல் இருந்து 2006 வரை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக பணிபுரிந்து தெலுங்கானா சட்டமன்றத்தில் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்தினார். இதனை அடுத்து 2015ல் அவர் தெலுங்கானாவில் வெற்றி பெற்றதை அடுத்து 2018 லும் இரண்டாவது முறையாக மீண்டும் தெலுங்கானாவில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை நடத்தி வந்தவர். இப்படி இரண்டு முறை தெலுங்கானாவில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று மூன்றாவது முறை 2023 ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் கே சி ஆர்! தொடர்ந்து இரண்டு முறை தெலுங்கானா தேர்தலில் வெற்றிக்கொடி கட்டி வந்த சந்திரசேகர் இதேபோன்று மூன்றாவது முறையும் வியூகம் அமைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த கே சி ஆரின் கனவு  நிராசைஆகியது.

இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் செய்தியை அறிந்த கே சி ஆர் குடும்பம்  அயோத்தியின் ராமர் கோவில் கட்டப்படுவது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என கே சி ஆரின் மகள் கே கவிதா பெரு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அதாவது, தெலுங்கானா முன்னாள் முதல்வர் மகளும் மகள் கே.சி.ஆர் கவிதா தனது எக்ஸ் பக்கத்தில், அயோத்தியில் ஸ்ரீ சீதாராமன் சந்திர ஸ்வாமி சிலை பிரதிஷ்டி செய்யப்படுவதன் மூலம் உலகில் உள்ள கோடிக்கணக்கான இந்து அமைப்பினரின் கனவு நினைவாக உள்ளது.இந்த மகிழ்ச்சியான செய்தியை தெலுங்கானா மாநிலத்துடன் இணைந்து ஒட்டுமொத்த நாடும் இதனை வரவேற்கிறது என்றும் குறிப்பிட்டார். இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும் பொழுது இனி வேறு வழி இல்லை ஆன்மீகம் தான் நமக்கு கைகொடுக்கும் என கே சி ஆர் குடும்பம் முடிவெடுத்து அதன் காரணமாகத்தான் கே சி ஆரின் மகள் கவிதா இது போன்ற ட்வீட் செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.