24 special

பெண் இணையவாசி போட்ட பதிவு.... நேஷனல் கிரஷ்க்கே இப்படி சோதனையா!!... ஒரே பதிவில் பதிலடி கொடுத்த ராஷ்மிகா!

rasmika
rasmika


தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து திரை உலகிலும் நேஷனல் கிரஷ் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானார். இருப்பினும் ராஷ்மிகா தெலுங்கில் முதன்முதலில் அறிமுகமான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்தது. மேலும் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபர் விருதையும் இப்படத்தின் மூலம் பெற்றார் ரஸ்மிகா! இதனை தொடர்ந்து ராஸ்மிகாவின் அடுத்த தெலுங்கு படமான டியர் காம்ரேட் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படத்திலும் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர் கொண்டாவின் ஜோடி பலரால் ரசிக்கப்பட்டது. இதனால் இந்த இரண்டு பேரும் அடுத்து எந்த படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பும் அவர்களது ரசிகர்களிடையே மேலோங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் தமிழில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் நடித்து தமிழிலும் அறிமுகமானார். 


மேலும் கடந்த 2021 புஷ்பா படத்தின் முதல் பாகத்திலும் நடித்து நல்ல வரவேற்பை கண்டார். இதனை தொடர்ந்து அனிமல் திரைப்படமும் ராஸ்மிகாவின் நடிப்பிற்கு ஒரு தீனி போட்டது. அதுமட்டுமின்றி தனது ரியாக்சன் மூலம் பல ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ராஷ்மிகா சமூக வலைத்தளத்தில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருப்பவர். தினமும் ஒரு போஸ்ட்டை வெளியிட்டு தனது ரசிகர்களை தன்னிடமே பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தமிழில் தளபதி விஜய் உடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி திரைப்படமாகவும் மாறியது. தமிழ், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய படங்களை தவிர ஹிந்தியிலும் தற்போது நடித்து நல்ல வெற்றியை கண்டு வருகிறார் ராஷ்மிகா. 

சமீபத்தில் கூட பிரதம நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார். இது பலரது கவனத்தையும் பெற்றது மேலும் சில விமர்சனங்களையும் ராஷ்மிகாவிற்கு கொடுத்தது. அதே சமயத்தில் ராஷ்மிகா குறித்த கேள்விகள் மற்றும் தமிழ் மற்றும் தெலுங்கு என பிற மொழி பட நடிகைகளுக்கு கேட்கப்பட்டாலும் அவர்கள் கூறும் பதில்கள் சில நேரங்களில் ராஸ்மிகாவுக்கும் அவருக்கும் ஏதோ ஒரு சண்டை என்ற வகையிலான பிம்பத்தையும் கிசுகிசுவையும் ஏற்படுத்தி விடும். ஆனால் அப்படிப்பட்ட கிசுகிசுக்களையும் எளிதில் சாதுரியமாக கையாண்டு அந்த விமர்சனத்தை ஒரு நொடியில் இல்லாமல் ஆக்கிவிடுவார். அந்த வகையில் தற்போது மற்றுமொரு பெரும் விமர்சனமாக பார்க்கப்பட்ட ஒரு கருத்தை மிகவும் எளிதாக கையாண்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் ரஸ்மிகா. 

அதாவது பான் இந்திய படமாக வெளியான அனிமல் திரைப்படம் ராஸ்மிகாவிற்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதே சமயத்தில் சில விமர்சனங்களையும் பெற்றுக் கொடுத்தது. ஏனென்றால் ராஷ்மிகா இப்படத்தின் முதல் பாகங்களில் கணவரை மொத்தமாக நம்பி இருப்பார், அடுத்த பாகத்தில் தனது நடிப்பை மிகவும் நேர்த்தியாக அசதி இருப்பார். இதனால் சில விமர்சனமும் பாராட்டும் இப்படத்திற்கு ராஷ்மிகாவிற்கு வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இணையதளவாசி ஒருவர் அனிமல் படத்தில் வரும் ஒரு காட்சியை பதிவிட்டு பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பயமே ஆண்களை நம்புவது தான் என பதிவிட்டு இருந்தார். அதற்கு ராஸ்மிக மந்தனா அனைத்து ஆண்களும் அப்படி அல்ல அவர்களின் நல்லவர்களும் இருக்கிறார்கள். அவர்களை நம்புவது அழகானது என்று பதிவிட்டு இணையவாசியின் அந்த பதிவிற்கு எழுந்த விமர்சனத்திற்கு அழகாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.