Cinema

கோட் திரைப்படத்தில் விஜயகாந்திற்கு அடுத்து ஏ ஐ பயன்படுத்தி அடுத்த இறந்த ஒரு பிரபலத்தை கொண்டு வரப் போகிறார்களா?? கசிந்த பரபர அப்டேட்....

THALAPATHY VIJAY
THALAPATHY VIJAY

நடிகர் விஜய் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அரசியலில் நுழைந்து தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரையும் வைத்து உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். இதனை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்த போவதாகவும் முழுமையாக அரசியலை மட்டுமே கவனிக்க போவதாகவும் அறிவிக்கை வெளியிட்டு இருந்தார். எனவே கடைசியாக இரண்டே திரைப்படங்கள் மட்டும் இவர் நடிப்பில் உருவாகப் போகிறது என்று அதில் ஒரு திரைப்படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ன வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, மோகன் மற்றும் சினேகா என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார்.


தற்போது இந்த திரைப்படத்தின் சூட்டிங் ஆனது ஹைதராபாத், பாண்டிச்சேரி, இலங்கை,  ரஷ்யா மற்றும் அமெரிக்கா என பல இடங்களில் நடந்து கொண்டு வருகிறது. இந்தத் திரைப்படம் ஆனது வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் இனி திரைப்படத்தில் விஜய் இரட்டை கேரக்டரில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வம் கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் விசில் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருந்து வருகிறது. மேலும் ஏற்கனவே இந்த திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் இத்திரைப்படத்தில் வரும் காட்சிகளில் விஜயகாந்த் அவர்களை ஏ ஐ மூலமாக நடிக்க வைக்க போவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.

விஜயகாந்த் மற்றும் விஜயின் காம்போ ஏற்கனவே செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் அமைந்திருந்தது. அதில் இவர்கள் இருவருமே சூப்பராக நடித்து அதிக அளவில் வரவேற்பை பெற்று வந்தனர். இதன் பிறகு தற்போது கோட் திரைப்படத்திலும் விஜய் மற்றும் விஜயகாந்த் ஆகிய இருவரும் இடம்பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் விஜயகாந்த் சினிமாவில் நடித்து பல காலங்கள் ஆகி தற்பொழுது அவர் உயிரோடு இல்லாத நிலைமையில் இது போன்று ஏ ஐ யை பயன்படுத்தி நடிக்க வைத்து அவரை திரையில் பார்க்க போகிறோம் என்ற ஆர்வம் விஜயகாந்த் ரசிகர்கள்  பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இவ்வாறு திரைப்படத்தில் பல விஷயங்கள் தொடர்ந்து புதிது புதிதாக செய்யப்பட்டு வருவதை தொடர்ந்து தற்பொழுது மற்றொரு  அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த அப்டேட்டிலும் சமீபத்தில் இறந்து போன பிரபலமான ஒருவரின் குரலை ஏ ஐ பயன்படுத்தி பாட வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது!! அது குறித்து விரிவாக காணலாம்!!

அதாவது சமீபத்தில்  உடல்நல குறைவினால் இறந்து போன இளையராஜாவின் மகள், அதாவது வெங்கட் பிரபுவின் தங்கை பவதாரணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவருடைய குரலினை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக விஜய் நடிக்கும் கோட்  திரைப்படத்தில் பயன்படுத்த போவதாக தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவருடைய குரலுக்கு பலரும் அடிமையாக இருந்த நிலையில் தற்பொழுது அவர் இறந்த நிலையில் மீண்டும் இந்த திரைப்படத்தில் அவரின் குரலை கேட்க போகிறோம் என்று ஆர்வத்தில் பலரும் இருந்து வருகின்றனர். இது குறித்த செய்தி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.