24 special

மேடையில் கண்ணீர்விடாத குறையாக புலம்பிய திமுக மூத்த தலைவர்...!இவரையும் இப்படி ஆக்கிட்டீங்களே...!

Drbalu,annamalai
Drbalu,annamalai

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி ஆர் பாலு மேடையில் பேசிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது, அண்ணாமலை என் தகுதிக்கு சமமானவர் கிடையாது அவரை பற்றி பேசினால் எனக்கு அவமானம் என பேசிய டி ஆர் பாலு மேடையில் முழுக்க முழுக்க அண்ணாமலையை மட்டுமே பற்றி பேசியதும்.


பிரதமர் மோடி அண்ணாமலை மற்றும் ஆளுநர் ரவி என்னும் இரண்டு போலீஸ்காரர்களை நம்பி நாட்டை ஒப்படைத்து இருக்கிறாரே நல்லா இருப்பாரா என்பது போல் கண்ணீர் சிந்தாத குறையாக மேடையில் புலம்பிய சம்பவமும் மேலும் தாம்பரம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது.

தாம்பரத்தில் பெருங்களத்தூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு பேசுகையில்.

நான் ஏதாவது பேசிவிட்டால் தலைவர் என்னை கூப்பிட்டு கண்டிப்பார். நான் என்ன அண்ணாமலையா என்னால் அவரைப் போல் தரை குறைவாக பேச முடியாது அப்படி நான் தரை குறைவாக பேச வேண்டும் என்றால் ஒன்று நான் அண்ணாமலையாக வேண்டும் இல்லையென்றால் அந்தக் கட்சியில் சேர வேண்டும்.

 தம்பி அண்ணாமலை மிகுந்த சங்கடத்தில் மாட்டிக் கொண்டு முழித்து கொண்டிருக்கிறார். தம்பி அண்ணாமலை ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை அவர் எங்கு சென்றாலும் என்னென்னமோ பேசிக் கொண்டிருக்கிறார் இது புதிது புதிதாக பேசிக் கொண்டிருக்கிறார் அவர் என்ன பேசுகிறார் என்பதை படிப்பதற்கு தனி டிக்சனரி தேவைப்படும்.

அவருக்கு நான் பதில் அளிக்க மாட்டேன். நான் ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதி எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை இரண்டு காவல்துறை அதிகாரிகளிடம் இந்த நாட்டை ஒப்படைத்து இருக்கிறாரே பிரதமர் நரேந்திர மோடி இதிலேயே அவர்கள் எவ்வளவு கீழ்த்தனமானவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் பிரதமர் ஒரு முழு நேர அரசியல்வாதியை நம்பாமல் ஒரு சாதாரணமான போலீஸ்காரர்களிடம் நாட்டை ஒப்படைத்து இருக்கிறார் ஒருவர் நாட்டின் ஆளுநராக இருக்கிறார் மற்றொருவர் கட்சியின் தலைவராக இருக்கிறார் இது நியாயமா போலீஸ்காரரிடம் என்ன நீதி இருக்கும்நிலமை எப்படி மாறிவிட்டது என்று நீங்களே கருதிக் கொள்ளுங்கள் சாதாரண ஆளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது 67 ஆண்டுகள் ஒரே கட்சியில் இருந்து பணியாற்றிய எனக்கு இந்த நிலைமை வந்துவிட்டது என மிகவும் கவலைப்படுகிறேன்.

இப்படி எல்லாம் நான் கவலைப்பட்டதே கிடையாது பெரிய பெரிய தலைவர்களுக்கு பதில் சொன்ன இயக்கம் தற்போது இவருக்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டு இது போன்று பேசிக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது நான் தாம்பரம் பகுதி மக்களிடையே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.அண்ணாமலை என்னிடம் பத்தாயிரம் கோடி இருக்கிறது என்று சொல்லி இருந்தார் ஆமாம் என்னிடம் பத்தாயிரம் கோடி இருக்கிறது என்ன பண்ணப் போற பத்தாயிரம் கோடி இருக்கிறது என்றால் எடுத்துட்டு போக போறியா அப்படியே இருந்தாலும் ஒவ்வொரு பைசாவும் சட்டப்பூர்வமாக நான் சம்பாதித்து மட்டுமே என்னிடம் இருக்கும் நீதிமன்றத்திற்கு வரும் பொழுது அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும் அதைப்பற்றி அவருக்கு பதில் அளித்துக் கொண்டு இருக்க முடியாது அரசியல் மேதைகள் வாழ்ந்த இந்த தமிழ்நாட்டில் இரண்டு போலீஸ்காரர்களை அமர வைத்து நாட்டை தவறுதலாக வழிநடத்தி வருகிறார்கள் அவர்கள் கட்சியிலேயே மூத்த தலைவர்கள் இருந்தார்கள் இவர்களுக்கெல்லாம் தெரியாத அரசியல் அண்ணாமலைக்கு தெரிந்து விட்டதா என்ன?

அண்ணாமலைக்கு மானம் ரோஷம் இருந்தால் என் குடும்பத்தை கூண்டில் ஏத்து பார்க்கலாம் இப்படி எல்லாம் பேசாதவன் ஏன் பேசுகிறேன் என்று பார்த்தால் எப்படி எல்லாம் ஒரு வார்த்தை முன்பே சொல்லி வைப்பது நல்லது என்னால் நிறைய பேச முடியும் ஆனால் கோபம் வந்தால் தான் பேசுவேன் தற்போது எனக்கு கோபம் வரவில்லை ஏனென்றால் ஒரு சாதாரண ஆள் ஒரு தீராத விளையாட்டு பிள்ளை பேசும்பொழுது என்னால் என்ன பேச முடியும் என்றார்.

அண்ணாமலை பற்றி பேசமாட்டேன் என சொல்லி சொல்லி திரும்ப திரும்ப அண்ணாமலை பற்றியே டீ ஆர் பாலு பேசியது திமுக தொண்டர்களிடமே சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது செந்தில் பாலாஜி பொன்முடி வரிசையில் அடுத்த தலைவர் டி ஆர் பாலு என்கிறார்களே அது தான் தலைவர் புலம்ப காரணமா? எப்படி இருந்த மனுஷன் இப்படி புலம்ப வைத்து விட்டார்களே என திமுகவினரை கூட்டத்தில் புலம்பும் நிலை தற்போது தமிழகத்தில் உண்டாகி இருக்கிறது.