24 special

மனைவி செய்த காரியம்..! மாறிப்போன முன்னாள் மத்திய அமைச்சரின் வாழ்க்கை..!


குஜராத் : காங்கிரசும் சர்ச்சைகளும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள். எப்போதுமே ஊடகங்களில் தலைப்புச்செய்தியில் காங்கிரஸ் தலைவர்கள் எப்படியாவது இடம்பிடித்துவிடுவார்கள். ஒன்று கட்சிக்குள் கைகலப்பாக இருக்கும். அல்லது காங்கிரஸ் நிர்வாகிகல் யாராவது ஒருவர் ஊழலில் சிக்கியிருப்பார். அதுவும் இல்லையெனில் பாலியல் வழக்கில் தொடர்புகொண்டிருப்பார் என பிஜேபியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


இந்நிலையில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் குஜராத் மாநில காங்கிரசின் மூத்த தலைவருமான பாரத்சிங் சோலங்கி கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது பெண் நண்பருடன் ஊர் சுற்றுவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ தீயாய் பரவியது. இந்த வீடியோவை எடுத்தது சோலங்கியின் மனைவி என்பது ஆச்சர்யமூட்டும் தகவல்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து குஜராத் அரசியலில் பூகம்பம் வெடித்தது. சோலங்கி மீது மக்களும் விமர்சனத்தை முன்வைக்கத்தொடங்கினர். இந்நிலையில் நேற்று பாரத்சிங் சோலங்கி செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது பல குடும்ப ரகசியங்களை பகிர்ந்துகொண்டார். அதைக்கேட்ட நிருபர்களே திகைத்து போயினர்.

அவர் பேசுகையில் " ரேஷ்மா படேலுக்கும் எனக்கும் 1999ல் திருமணம் நடைபெற்றது. திருமணம் சில மாதங்களிலேயே நாங்கள் பிரிந்துவிட்டோம். ஒன்றாக வாழவில்லை. கடந்த காலங்களில் எனது சொத்துக்களை அபகரிக்க முயன்றதால் விவாகரத்து கோரியுள்ளேன். என்னை கொல்ல பேயோட்டும் நபரை தொடர்புகொண்டுள்ளார்.

நான் சிறிதுகாலம் தீவிர அரசியலில் இருந்தும் சமூக நடவடிக்கைகளில் இருந்தும் ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளேன். கட்சி தலைமை என்னை வற்புறுத்தவில்லை. இந்த ஓய்வுக்காலத்தில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களை நேரில் சந்திக்க உள்ளேன்" என பாரத்சிங் சோலங்கி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.