24 special

அத்துமீறிய திருச்சி சூர்யா சிவா.... அதிரடி காட்டிய பெண்!!

trichi surya siva
trichi surya siva

திமுகவின் மூத்த அமைச்சர்கள் பட்டியலில் உள்ள திருச்சி சிவாவின் மகனான சூரிய சிவா திமுகவில் தனக்கும் தனது தந்தைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறி திமுகவிலிருந்து விலகி, அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தவர். இருப்பினும் அங்கு பெண் நிர்வாகி ஒருவரை அவதூறாக பேசியதாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். அதற்குப் பிறகு மீண்டும் இணைக்கப்பட்டு பாஜகவில் ஒரு முக்கிய பொறுப்பில் படு ஆக்டிவாக பல நிகழ்ச்சிகள் மற்றும் மேடைகளில் கலந்து வந்தார் திருச்சி சூரிய சிவா. இருப்பினும் சமீபத்தில் மீண்டும் இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாக அவரை அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் அறிக்கை வெளியிட்டார்.


இதனை அடுத்து அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டதாலே தமிழக பாஜகவில் இணைந்தேன்.இனியும் தமிழக பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை சுயமரியாதை முக்கியம் என்று ஒட்டுமொத்தமாக பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிக்கை வெளியிட்டார். இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி சூர்யா சிவா மீது பெண் ஒருவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது அவரது தனிப்பட்ட புகைப்படங்களையும் உரையாடல்களையும் திருச்சி சூர்யா சிபா பொதுவெளியில் வெளியீட்டு உள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க விரைவில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி அந்த பெண் தரப்பில் விசாரித்த சமயம் திருச்சி சூர்யா சிவா தன்னை அவரின் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த பார்க்கிறார் அதனால் காவல்துறை வசம் இந்த புகாரை எடுத்துச்செல்லலாம் என முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் அந்தப் பெண் திருச்சி சூர்யா சிவா மீது புகார் அளித்துள்ளார். அதாவது மோனிஷ் ராய் என்ற பெண் வேப்பேரி பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருச்சி சூர்யா சிவா மீது புகார் அளித்துள்ளார். அதில், நானும், இடும்பாவனம் கார்த்திக் என்பவரும் கடந்த ஐந்து வருடங்களாக ஒருவரை ஒருவர் நேசித்து பழகி வருகிறோம். இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அவர் தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளையும், தற்போது ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறைகளையும் எடுத்துக்காட்டி, பல்வேறு தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் நடைபெறும் விவாதங்கள், நேர்காணல்கள் ஆகியவற்றில் பங்குகொண்டு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இதனால், அரசியல்ரீதியாக அவருக்கு எதிரிகள் உருவாகுவதுடன், ஒரு சில அரசியல் எதிரிகள் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொய் செய்திகளையும், ஆபாசமான கருத்துகளையும் பரப்பி வருகின்றனர். 

இந்த நிலையில், 18.07.24 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்களின் மகன் திருச்சி சூர்யா என்கிற மணிவண்ணன், அவருடைய எக்ஸ் தளத்தில் இளம் பெண்ணை கர்ப்பம் ஆக்கி ஏமாற்றிய இடும்பாவனம் கார்த்திக் எனும் தலைப்பிட்டு, 2 நிமிடங்கள் 56 வினாடிகள் ஓடக்கூடிய குரல் பதிவில், நானும் இடும்பவான் கார்த்திக்கும் பேசியதை வெளியிட்டுள்ளார்.. இந்த மேற்கண்டப் பதிவை இலட்சணக்கணக்கானோர் பார்த்தும், கேட்டும், மறுபதிவிட்டும் வருகின்றனர். அந்தப் பதிவின் விமர்சனப்பிரிவில் பல்வேறு நபர்கள் ஆபாசமான கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர். எங்கள் அனுமதியில்லாமல் என்னுடைய புகைப்படங்களையும், அதில் பொய்யான செய்திகளையும் பதிவிட்டுள்ளார்.

அவர் இந்த உரையாடல்களை நாம் தமிழர் கட்சி மீதும், இடும்பாவனம் கார்த்திக் மீதுமுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களுக்கிடையே அவருடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் மேற்கண்ட எங்கள் இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடலை போன் ஹேக்கிங் மூலம் திருடியோ, பிறரின் அலைபேசியிலுள்ள உரையாடல்களை திருடியோ தன்னுடைய, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது எக்ஸ் அக்கவுண்ட்டை தடை செய்ய வேண்டும் என்றும் மோனிஷ் ராய் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..