Cinema

நடிகை ஸ்ரீ ரெட்டி மீது பாய்ந்த புகார்!! அரசியல் பிரமுகர்கள் விவகாரத்தில் ஏற்பட்ட திருப்பம்....

sree reddy
sree reddy

ஆந்திராவில் பிறந்து வளர்ந்து தற்பொழுது திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையாக ஸ்ரீ ரெட்டி இருந்து வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டில் நேனு நானா அப்பத்தம் என்ற திரைப்படத்தில் முதல் முறையாக அறிமுகம் ஆனார். தெலுங்கில் வெளியான இந்த திரைப்படத்திற்கு பிறகு அரவிந்த் 2 மற்றும் ஜிந்தகி போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். குறைவான அளவில் திரைப்படங்களில் நடித்து வந்த போதிலும் இவரை தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒருவராக இருந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் ஆந்திரா மற்றும் தமிழ் போன்ற சினிமாக்களில் நடிக்கும் பொழுது அதில் மறைமுகமாக நடக்கும் பல வேலைகளை இவர் வெளிச்சத்திற்கு கொண்டு வருவது மிக முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. 


மேலும் தன்னை தவறான செயல்களுக்கு அழைத்ததாக கூறி பல்வேறு தென்னிந்திய நடிகர்கள் மீதும் இயக்குனர்கள் மீதும் தயாரிப்பாளர்கள் மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் செய்து வந்த போராட்டம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. மேலும் நடிகர் விஷால் மற்றும் ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் போன்ற ஒரு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிப்படையாக ஸ்ரீ ரெட்டி புகார் அளித்ததை தொடர்ந்து பலரும் இதற்கு மறுப்பு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

மேலும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கும் நடிகரான நானி, நடிகர் ராணாவின் தம்பியான அபிராம், இயக்குனர்கள் சேகர் கம்முலு, கொரட்டல சிவா, கதாசிரியர் கோனா வெங்கட் போன்றவர் மீதும் பாலியல் புகார் கொடுத்து வந்தார். இதனை தொடர்ந்து சமீப காலங்களாகவே ஸ்ரீ ரெட்டி இது போன்ற சர்ச்சைகள் எதையுமே கிளப்பாமல் தனது சொந்த ஊரில் சமையல் செய்வது லைப் ஸ்டைல் மற்றும் ஃபேஷன் போன்ற வீடியோக்களை youtube போன்ற இணையதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த ஸ்ரீ ரெட்டி தற்பொழுது அமைதியாக வீடியோக்களை இணையதளங்களில் பதிவிட்டு வருவதை நெட்டிசன்கள் பார்த்து வந்த சமயத்தில் தற்பொழுது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

ஆனால் இந்த முறை சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள் மீது எந்த ஒரு சர்ச்சையையும் ஏற்படுத்தாமல் அரசியல் ரீதியாக உள்ளவர் மீது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இவரு அவர் சர்ச்சை ஏற்படுத்தியது யார் என்றால் ஆந்திர மாநிலத்தின் முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு மீதும், ஆந்திர மாநிலத்தின் துணை முதல் மந்திரி பவன் கல்யாண் மற்றும் மந்திரி லோகேஷ், அனிதா ஆகியோர் மீதுதான்!! இவர்கள் பற்றி மிகவும் அவதூறாக ஸ்ரீ ரெட்டி பேசியதாகவும் அதற்காக கர்னூல் மூன்றாவது டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீ ரெட்டி மீது அவதூறாக பேசியதற்காகவும் தவறான கருத்துக்களை கூறியதாக அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் கைது செய்ய படுவார் என்று செய்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் இது குறித்த செய்தி தற்பொழுது ஆந்திரா மற்றும் தமிழ் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதோடு தொடர்ந்து பல சர்ச்சைகளில் மாட்டி வரும் ஸ்ரீ ரெட்டி குறித்து தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.