24 special

மீண்டும் கேள்வி குறியான ஜஸ்டின் ட்ருடோ ஆட்சி...! மாஸ் காட்டும் மோடி...!

pm modi,
pm modi,

இந்தியாவுடன் காஸ்மீர் விஷயத்தில் மல்லுக்கு நின்ற அப்போதைய மலேஷியா பிரதமர் மெஹதிர் முகமது தனது பிரதமர் பதவியை இழந்தார்,  மலேஷியா நாட்டில் இருந்து பாமயில் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்த மறு நாளே மெஹதிர் முகமது பதவி ஆட்டம் கண்டு இறுதியில் கூட்டணி ஆட்சி உடைந்து மெஹதிர் பதவி இழந்தார் இதற்கு இந்திய அரசே காரணம் என இப்போது வரை மெஹதிர் ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர். 


இது ஒருபுறம் இருக்க தற்போது மலேஷியா பிரதமர் போன்றே இந்தியாவை பகைத்த கனடா பிரதமர் பதவியும் பறி போகும் நிலை உண்டாகி இருக்கிறது அதிலும் இந்திய தூதர் எழுப்பி இருக்கும் கேள்வியை கேட்டு மிரண்டு இருக்கிறது கனடா அரசு. காலிஸ்தான்  அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த, ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டார்இந்த விவகாரத்தில், இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாகவும் நீதி நிலை நாட்டப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த செப்டம்பரில் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார். கனடாபிரதமரின்பேச்சுசர்ச்சையைகிளப்ப கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் இந்தியா தெரிவித்தது.இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான துாதரக உறவு பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கனடாவுக்கான இந்திய துாதர் சஞ்சய் குமார் வர்மா, கனடாவில் உள்ள தனியார், 'டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில் கனடா அரசை டார் டாராக கிழித்து தொங்கவிட்டார். நிஜ்ஜார் கொலை வழக்கில் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளாமல், இந்தியாவை குற்றவாளியாக கனடா அறிவித்துஉள்ளதை ஏற்க முடியாது.இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி, இந்திய அரசுக்கு கனடா கூறியுள்ளது.அப்படியென்றால், இந்த விவகாரத்தில் உங்களுக்கு தொடர்பு உள்ளது. அதனால் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி கூறுவதாகத்தானே அர்த்தம்?ஏற்கனவே பலமுறை கூறியுள்ளதுபோல், நிஜ்ஜார் கொலையில், இந்திய அரசுக்கோ, இந்திய ஏஜன்ட்களுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை.உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள் அதை பரிசீலிக்கிறோம் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால், இதற்கு எந்த பதிலும் வரவில்லை.கனடாவில் இருந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.

உங்களுடைய மண்ணில் ஏதாவது பிரச்னை இருந்தால், அது குறித்து நாங்கள் கேள்வி எழுப்ப முடியாது.வலியுறுத்தல்அதே நேரத்தில், எல்லையைக் கடந்து, அங்குள்ள பயங்கரவாதிகள் இந்தியாவில் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.அதனால் தான், அவர்களை ஒடுக்கும்படி கனடாவை வலியுறுத்துகிறோம். தடை செய்யப்பட்ட இயக்கம் மற்றும் பயங்கரவாதிகள் தொடர்பான விபரங்களை கனடாவுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளோம்.ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தங்களுடைய நாட்டில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதற்கு, எங்களை கேள்வி எழுப்பினால், அதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார். கனடாவில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் சிறுபான்மை சீக்கியர்கள் வாக்கை கைப்பற்ற கனடா பிரதமர் இந்தியா மீது குற்றம் சுமத்திய நிலையில் தற்போது இந்தியா எடுக்கும் நடவடிக்கையால் கனடா மக்களும் ஜஸ்டின் ட்ருடோ அரசிற்கு எதிராக கிளம்பி இருப்பதால் ஜஸ்டின் ட்ருடோ ஆட்சி மீண்டும் வருவது கேள்வி குறியாக மாறி இருக்கிறது.