24 special

அமலாக்க துறையிடம் சிக்கித்தவிக்கும் அமைச்சர் உதயநிதி ...! அச்சத்தில் முதல்வர் குடும்பம்

Mk stalin , udhayanidhi stalin
Mk stalin , udhayanidhi stalin

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவிற்கு நெருக்கமான தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது அப்போது செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி வருமான வரித்துறை சோதனை எல்லாம் திமுகவிற்கு ஒன்றும் புதிது இல்லை எத்தனை சோதனை பார்த்து இருக்கிறோம் எதையும் சந்திக்க தயார் என கூறி இருந்தார்.


இந்த சூழலில் தான் தற்போது உதயநிதிக்கு நெருக்கமான நண்பர்கள் அதிலும் குறிப்பாக ரெட் ஜயிண்ட் மூவிக்கு நெருக்கமான இடங்களில் வருமான வரித்துறை இல்லாமல் அமலாக்க துறையே நேரடியாக களத்தில் இறங்கி சோதனை நடத்தி இருப்பதும் அதில் லைக்கா நிறுவனம் தரப்பில் இருந்து ரெட் ஜயிண்ட் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் அளவிற்கு பண பரிவர்த்தனை செய்தது கண்டறியப்பட்டு இருக்கிறதாம்.

இந்த நிலையில்தான் தற்போது மிக பெரிய பிரச்சனையை திமுக சந்திக்க இருப்பதாகவும் இதில் உதயநிதியின் அரசியல் எதிர் காலம் என்ன ஆகும் என்ற கவலையில் இருக்கிறதாம் அதிலும் குறிப்பாக உதயநிதிக்கு நெருக்கமான நண்பர் பாபு வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தான் மிக பெரிய அழுத்தத்தை உதயநிதிக்கு கொடுத்து இருக்கிறதாம்.

சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சினிமா படங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள, 'லைக்கா' நிறுவன அலுவலகங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அமைச்சர் உதயநிதியின், 'ரெட் ஜெயன்ட்' பட தயாரிப்பு நிறுவனத்துடன், கோடிக்கணக்கில் பண பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது,

ஆவணங்களின் அடிப்படையில் சென்னை வேளச்சேரியில் உள்ள, உதய நிதியின் நெருங்கிய நண்பர்  வீட்டில் முதலில் சோதனை நடந்து உள்ளது.அதன்பிறகு எக்மோர் எத்திராஜ் சாலையில் உள்ள வழக்கறிஞர் பாபு என்பவர், உதயநிதியின் ரசிகர் மன்றம் மற்றும் அறக்கட்டளை அலுவலகம் நடத்தி வருகிறார். அவரது அலுவலகத்திலும், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேரடியாக சோதனை நடத்தினர்.

இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விளக்கம் அளிக்க பாபுவிற்கு சம்மன் கொடுக்கப்பட்டது அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அமலாக்கத் துறை அலுவலகத்தில், பாபு  ஆஜரானார்.

இதற்கிடையில், 'லைக்கா' நிறுவனம், உதயநிதி நண்பர் வீடு, ரசிகர் மன்ற நிர்வாகி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள்நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அதன் அடிப்படையில், உதயநிதிக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரணைக்கு  அழைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் உதயநிதி எதையும் சந்திக்க தயார் என கூறி இருந்தார், இந்த நிலையில் உதயநிதிக்கு செக் வைக்கும் விதமாக உதயநிதி இயக்குனராக இருந்த நிறுவனம் மற்றும் அது தொடர்புடைய நபர்கள் மீது நேரடியாக அமலாக்கதுறை அதிகாரிகள் களத்தில் இறங்கி இருப்பது அடுத்து என்ன நடக்க போகிறது, எது போன்ற விசாரணை வளையம் உண்டாக போகிறது என்ற அச்சத்தில் இருக்கிறதாம் முதல்வர் குடும்பம்.