24 special

வந்தா தொலச்சிடுவோம் விஜயகாந்த் விவகாரத்தில் வடிவேலுக்கு ஏற்பட்ட கதி…..

vijayakanth, vadivelu
vijayakanth, vadivelu

சினிமா துறையில் 90களில் மாஸ் ஹீரோவாக இருந்த விஜயகாந்த் சாமானிய மக்கள் அனைவரையும் தன் அன்பால் கட்டி போட்டவர், அவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றிற்கும் எளிய மக்களின் கூட்டம் அதிகமாக வரும் என்று கூறுவார்கள் அதே போன்று அவரது படப்பிடிப்பிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருவதும் தான் உண்ணும் உணவையே அவர்கள் அனைவருக்கும் விஜயகாந்த் வழங்கி பசியாற்றுவார் என்பதும் சினிமா வட்டாரங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள். இப்படி சினிமா துறையில் கொடிக்கட்டி பறந்த கேப்டன் விஜயகாந்த் அரசியலில் இறங்கினார், இறங்கிய சில வருடங்களில் பல தோல்விகளையும் ஏமாற்றங்களையும் துரோகங்களையும் சந்தித்த விஜயகாந்த்திற்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது .


மேலும்  விஜயகாந்த் மிகவும் மோசமான நிலையில் உள்ளார் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் சில நேரங்களில் பலன் அளிக்காமல் போகிறது என்ற தகவல் மியாட் மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கையாக வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும் அவர் உடல் நலம் பெற்றார், வீடும் திரும்பினார், இது அவரின் ரசிகர்களையும் கட்சி நிர்வாகிகளையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. எனினும் யாரும் எதிர்பாராத வகையில் மீண்டும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,  ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலையிலேயே உயிரிழந்தார் இதை அடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதிலிருந்து தமிழக முழுவதும் ஆழ்ந்த வருத்தங்களை விஜயகாந்த் இறப்பிற்கு தெரிவித்து வருகிறது, 

மேலும் அவரது ரசிகர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் விஜயகாந்த் பார்ப்பதற்காக கோயம்பேட்டில் குவிந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் விஜயகாந்த் அரசியலில் தோல்வியை தழுவியதற்கான முக்கிய காரணங்களும் சில உண்மைகளும் விஜயகாந்த் சுற்றிய நடந்த சூழ்ச்சி தகவல்களும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில், வடிவேலின் மீது விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் கோபம் வலுவடைந்து உள்ளது. முன்னதாக வடிவேலுவிற்கு சின்ன கவுண்டர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தி அதற்குப் பிறகான பல பட வாய்ப்புகளை வடிவேலுக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த், மேலும் உடுத்த உடையும் இன்றி துயரபட்ட வடிவேலுவிற்கு உடைகளை வாங்கி கொடுத்து இந்த அளவிற்கு வடிவேல் வளர்ந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவரும் விஜயகாந்த் என்று திரை உலக முழுவதும் கூறப்படுகிறது.ஆனால் அப்படி தன் வளர்ச்சிக்கும் திரை உலக வாழ்க்கைக்கும் காரணமாக இருந்த விஜயகாந்தையே வடிவேல் திட்டியதற்கு வடிவேல் மீது விஜயகாந்தின் ரசிகர்களும் தொண்டர்களும் அதிக கோபத்தில் இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், அரசியல் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் விஜயகாந்த்தை இதுவரை யாரும் இவ்வளவு இழிவாக பேசிடாத முறையில் பேசிய வடிவேல் வீடியோவை பதிவிட்டு சின்னக்கவுண்டர் படத்தில் எடுபிடி கேரக்டரில் நடித்த வடிவேலுவுக்கு அதன் பிறகு கோயில் காளை, தமிழ்ச்செல்வன், நரசிம்மா, ராஜ்ஜியம், தவசி என பல படங்களில் வாய்ப்பளித்தார் கேப்டன் விஜயகாந்த். 'எங்கள் அண்ணா' படத்தில் தன்னுடனேயே இருக்கும் முக்கிய நகைச்சுவை கேரக்டர் வாய்ப்பையும் அளித்தார்.    அப்படிப்பட்டவரை மூதேவி, லூசுப்பய, குடிகாரன் என பொதுமேடையில் பேசிய வடிவேலு, பொதுமக்கள் மற்றும் திரையுலகத்தினர் எவரும் விஜயகாந்தை தவறாக பேசியதில்லை. ஆனால் இவ்வளவு இழிவாக பேசிய ஒரே நடிகர் வடிவேலுதான் என குறிப்பிட்டுள்ளார் இது இணையங்களில் வைரலாகியுள்ளது. மேலும் இப்படி யாரும் எதிர்பாராத வகையில் கேப்டன் விஜயகாந்த் இறந்ததால் வடிவேல் மனம் மாறி அவரை காண்பதற்கு வந்தாலும் வருவார் ஆனால் அவர் வரக்கூடாது! வந்தால் வேற மாதிரி ஆகிவிடும் என விஜயகாந்த் ரசிகர்கள் கொந்தளிப்புடன் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.