24 special

சரியான தேர்தல் நேரம் பார்த்து பற்றவைத்த விஜய் ஆன்டணி… அம்பலமான சரியான பின்னணி…

vijay antony,Drinks
vijay antony,Drinks

சினிமா துறையில் உள்ளவர்கள் மிகவும் பிரபலமான நபர்களாக இருப்பினும் சில சமயம் அவர்களுக்கே தெரியாமல் ஏதாவது ஒன்று சொல்லி இன்றுள்ள மீடியாக்களிடம் மாட்டிக் கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனியும் ஒரு சர்ச்சையில் மாட்டியுள்ளார்!!!


Vibe மன்னன் என்று அழைக்கப்படும் விஜய் ஆண்டனி பள்ளியிலிருந்து  இசையில் அதிக ஆர்வம் கொண்டு இருந்தார். பள்ளி படிப்பை முடித்தவுடன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் விஸ்காம் முடித்துள்ளார். அதன் பின் நேரடியாக மியூசிக் டைரக்டராக ஆகாமல் அந்த இடத்தில் டீ வாங்கிக் கொடுக்கும் வேலையை செய்து கொண்டிருந்தார். அதன் பின் நடிகை ராதிகா இவரின் இசை திறமையை கண்டு 2002ம் ஆண்டு ஒரு சின்னத்திரை சீரியலில் அக்னி என்ற பெயரில் இசையமைத்துள்ளார். இதைத்தொடர்ந்து கனா காணும் காலங்கள், காதலிக்க நேரமில்லை போன்ற சீரியல்களின் தலைப்பு பாடல் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்தது. அதன் பின் 2005 ஆம் ஆண்டு முதல்முறையாக சுக்கிரன் என்ற திரைப்படத்தில் இசையமைத்தார். அதன் பின் 2006 ஆம் ஆண்டு டிஷ்யூம் என்ற படத்தில் இசையமைத்தால் இது மிகவும் பெரிய வெற்றிகரமாக இவருக்கு அமைந்தது. இதற்குப் பிறகு நினைத்தாலே இனிக்கும், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், நான், சலீம் எனத் தொடங்கி தற்போது பிச்சைக்காரன் வரை பல திரைப்படங்களில் இசையை அமைத்து பெரும் வெற்றியை கண்டுள்ளார்!! 

அதைத் தொடர்ந்து மேலும் 50க்கும் மேற்பட்ட பாடல்களையும் இவர் பாடியுள்ளார்!! மேலும் 2012 ஆம் ஆண்டு நான் என்ற திரைப்படத்தில் தயாரித்து மேலும் அதில் நடிக்கவும் செய்தார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பின் சலீம் பிச்சைக்காரன் போன்ற அடுத்தடுத்து படங்களை கொடுத்து வந்தார் இது பெரிய அளவில் இவரின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தியது!! இதைத்தொடர்ந்து தற்போது  ரோமியோ என்ற திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மதுப்பழக்கம் குறித்து அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார்!! இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளரிடம் நீங்கள் குடிப்பீர்களா என்று கேள்வியும் எழுப்பி உள்ளார்!! இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் குடிப்பதில் சம உரிமை உண்டு எனத் தொடர்ந்த பேசிக் கொண்டு இருக்கும் பொழுது இயேசு கிறிஸ்துவும் மது அருந்தி உள்ளார் என்ற வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார்!! 

இந்த சர்ச்சைக்குள்ள பேச்சானது கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாத தமிழ் மக்களின் மனதையும் புண்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிறது. உலகம் எங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ மக்களாலும் ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து தர மக்களாலும் போற்றப்படுபவர் இயேசு கிறிஸ்து!! அப்படி இருக்கும்போது எந்தவித ஆதாரமும் இன்றி இவர் இழிவுபடுத்தும் வகையில் இயற்கையான திராட்சை பல சாரினை, போதை பொருளுக்கு சமப்படுத்தி கூறுவது கிறிஸ்தவ மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

 இதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி தனது இணையதள பக்கத்தில் "  நான் முன்தினம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார், என்று கூறி இருந்தேன். ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளைத் தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தபடுத்தியதால், உங்களைப்போன்ற சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது." என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த சமயத்தில் விஜய் ஆன்டணி பேசியது பற்றி இதுவே தேர்தல் நேரமாக இல்லாமல் இருந்திருந்தால் பிரச்சினைகள் எழுந்திருக்கும் ஆனால் தேர்தல் நேரம் என்பதால் இது பெரிதாக வெடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது...