Politics

வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த விருகம்பாக்கம் திமுக வேட்பாளர்!!

வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த விருகம்பாக்கம் திமுக வேட்பாளர்!!
வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த விருகம்பாக்கம் திமுக வேட்பாளர்!!

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் பிரபாகர் ராஜா, தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வீதீ வீதியாக சென்று தாய்மார்கள், கடைகள், கல்லூரி மாணவ மாணவிகளிடம்  தீவிர வாக்கு சேகரிப்பில்  ஈடுப்பாட்டார்.


அப்போது  தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் வாக்களர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும்,  முககவசத்தை அவரே அணிவித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அத்துடன், பிரபாகர் ராஜா வாக்காளர்கள் வீடுகளில் பழரசம் அருந்தினார். கமல், சீமான் போன்றோர் படத்தில் மட்டுமே நடித்ததாகவும் திமுகதான் பெண்களுக்கு சமூக நீதியையும், சமஉரிமையையும் பெற்று தந்த கட்சி என துண்டு பிரசுரங்களை  வழங்கி உதயசூரியன் சின்னத்தில் தாய்மார்கள் வாக்களித்து தன்னை வெற்றிபெற செய்யுமாறு கேட்டு கொண்டார்.

இந்நிலையில் உணவகம் ஒன்றிற்கு சென்றவர், அங்கிருந்த மாவினை எடுத்து அவரே தோசை ஊற்றினார், இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் நடவடிக்கை கவனத்தை பெற்றுள்ளது.