24 special

வாட்ச்சுக்கு மட்டும் தானே பில்லு கேட்டோம்...இப்படியா ஒட்டுமொத்த திமுகவுக்கும் ஆப்பு வைப்பது?

Senthil balaji, annamalai
Senthil balaji, annamalai

சொந்த காசில் சூனியம் வைத்து கொண்டார்கள் என வழக்கத்தில் இருக்கும் பழமொழி ஒன்று யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ திமுகவிற்கு குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 100% பொருந்தி இருக்கிறது.


அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது ட்விட்டர் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டி இருக்கும் வாட்ச் குறித்தும் ரசீது வெளியிட முடியுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார் அதற்கு அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப உடனடியாக தன்னுடைய வாட்ச்சை கழட்டி அதன் சிறப்புகள் என்ன என அண்ணாமலை பாடமே எடுத்தார்.

அண்ணாமலை வாட்ச் குறித்து நீண்ட விளக்கம் கொடுத்த போதே இதன் பின்னணியில் ஏதோ பெரிய ஆப்பு வர போகிறது என பரவலாக பேச பட்டது, அந்த பேச்சு தற்போது உறுதியாகி இருக்கிறது, இன்று காலை அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்,.

ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள்,என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.

அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன்.

நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா? என கேட்டு இருக்கிறார் அண்ணாமலை.

அண்ணாமலையிடம் வாட்ச் ரசீதை வெளியிட முடியுமா என கேட்ட நிலையில் அவர் தனது வருமானம் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் பொது வெளியில் வைக்க போகிறேன் என நாளும் குறித்து விட்டார், அதோடு நில்லாமல் திமுகவினர் வருமான வரி கணக்கை வைக்க தயாரா எனவும் பதில் கேள்வி எழுப்பி இருப்பது அண்ணாமலைக்கு செக் வைக்க நினைத்த செந்தில் பாலாஜிக்கு மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த திமுகவினருக்கும் ஆப்பாக அமைந்து இருக்கிறது.

அண்ணாமலை வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் பாதை யாத்திரை செல்ல முடிவு செய்து இருப்பதாகவும் குடும்ப ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிராக நடை பயணம் அமைய இருப்பதாக TNNEWS24 க்கு பிரத்தியேக தகவல் கிடைத்து இருக்கிறது,இந்த பயணத்தில் ஒவ்வொரு அமைச்சர்கள் மாவட்டத்திற்கு செல்லும் போது நான் எனது வருமான வரி கணக்கை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து விட்டேன் நீங்கள் தைரியமான ஆண் மகனாக இருந்தால் பொது வெளியில் கூறுங்கள் என சவாலாக அண்ணாமலை கேட்க போகிறாராம்.

மொத்தத்தில் அண்ணாமலை வாட்ச் குறித்த விளக்கம் கேட்க சென்று நேரம் காலம் இல்லாமல் ராகு காலத்தில் செந்தில் பாலாஜி சிக்கி இருப்பதுடன்... திமுகவினரும் சிக்க வைத்து சொந்த காசில் சூனியம் தேடி கொண்டு இருக்கிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.