24 special

பிரதமர் மோடி செய்த காரியம் ...!ஒட்டு மொத்த தமிழர்களும் மகிழ்ச்சி

Pm modi
Pm modi

நாடே இன்று மிக பெரிய ஆவலுடன் எதிர்பார்த்த நிகழ்வு சற்று முன் அரங்கேறி முடிந்து இருக்கிறது, புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் தமிழில் மந்திரம் ஓத செங்கோலை நாடாளுமன்றத்தில் அதற்காக செய்யப்பட்டு இருந்த பிரத்தியேக இடத்தில் வைத்தார் பிரதமர்.


இந்த நிகழ்ச்சி நடந்த போது தமிழக ஆதினங்கள் ஒவ்வொருவரிடமும் பிரதமர் மோடி தலை குனிந்து அவர்கள் ஆசியை பெற்ற ஆச்சர்ய சம்பவம் அரங்கேறியது அது புறம் இருக்கையில் செங்கோலை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நிறுவும் போது, கீழே நின்று இருந்த மக்களவை சபாநாயகரை அழைத்து அருகில் நிறுத்தியதும் அவரை விளக்கு ஏற்றிய சம்பவங்களும் அரங்கேறி இருக்கிறது.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.இந்தியாவின் உச்சபட்ச அடையாளமாக திகளும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தமிழர்களின் அடையாளம் சோழர்கால செங்கோலை நிறுவியதும் தமிழில் வேத மந்திரங்கள் ஒலிக்க புதிய நாடாளுமன்றம் திறக்க பட்டதும் ஒட்டு மொத்த தமிழர்களையும் கட்சிகளை கடந்து மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது.