24 special

பல சர்ச்சைகளுக்குப் பிறகு நடிகர் சூர்யா செய்த காரியம்!! கோடிகளை காப்பாத்த இப்படி ஒரு திட்டமா...?

surya
surya

சூர்யா இவர்  நடிகர் சிவகுமாரின் மகன் என்பதால் இவருக்கு சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து ஒரு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. அது மட்டுமல்லாமல் இவரின் நடிப்புக்களை மிகவும் நுணுக்கமானதாக இருந்து வந்ததால் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அதிக அளவில் வெற்றி பெற்ற திரைப்படமாகவே இருந்து வந்த போதிலும் சில திரைப்படங்கள் அவ்வபோது சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வந்தது. 


அதிலும் குறிப்பாக சூர்யா நடிப்பில் வெளிவந்த 7ம் அறிவு திரைப்படத்தில் நோய் பரவுவது போன்ற கதை அமைந்திருந்தது அதன் பிறகு உண்மையாகவே உலகம் முழுக்க கொரோனா தொற்று பரவிய பொழுது சூர்யாவின் 7ம் அறிவு திரைப்படத்தை வைத்து பல விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. மேலும் சூர்யா அதன் பிறகு தானா சேர்ந்த கூட்டம், ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படங்களும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை தட்டிக் கேட்பது போன்றும், அதற்கு சரியான தீர்வு அளிப்பது போன்று கதை அமைந்திருந்த காரணத்தினால் தொடர்ந்து பல சர்ச்சையில் மாட்டி வந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா கடந்த ஆட்சி காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்து வந்த சமயத்தில் சமூகத்தில் நடந்த பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அந்த வகையில் ஹிந்தி திணைப்பு எதிர்ப்பு, நீட் தேர்வுகளை எதிர்த்து தொடர்ந்து போராடுதல் போன்ற பல செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஆனால் தற்பொழுது திமுக ஆளும் கட்சியாக இருந்து வரும் சமயத்தில் சமூகத்தில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்காமல் அமைதி காத்து வருகிறார். இதனை தொடர்ந்து முதலில் குரல் கொடுத்து வந்த நடிகர் சூர்யா தற்பொழுது எங்கே போனார் என்று தெரியாத அளவிற்கு இருக்கிறார் என்று தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கள்ளச்சாராயம் பிரச்சனையின் போது அமைதி காத்து வந்த சூர்யா தொடர்ந்து எழுந்த சாட்சியின் காரணமாக கள்ளச்சாராயத்தை எதிர்த்து திமுகவிடம் கேள்வியை எழுப்பி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் சூர்யாவின் பிறந்த நாள் நடந்த முடிந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு சூர்யா திரைப்படமும் அப்டேட் இல்லாத நிலையில் பிறந்தநாள் அன்று பல அப்டேட்டுகள் வெளியானது. 

இந்த நிலையில் தற்போது சூர்யா நடித்து கங்குவா திரைப்படத்தில் அமைந்திருக்கும் fire என்ற பாடல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து அனைவரும் கிண்டல் செய்ய ஆரமிந்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து பல சர்ச்சைகளில் மாட்டி வந்த சூர்யா கங்குவா திரைப்படத்தில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று நினைத்த சமயத்தில் தற்பொழுது தொடர்ந்து கங்கவா திரைப்படத்திற்கு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.  

இந்த நிலையில் நடிகர் சூர்யா எப்படியாவது ஏற்பட்ட சர்ச்சைகளை எல்லாம் மறைத்து கங்குவா திரைப்படத்தை வெற்றி பெற செய்ய வைக்க தொடர்ந்து பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து புது வகையில் ஓட வைப்பதற்கு நாடகத்தை போட்டு வருகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது... அதற்காக தற்பொழுது ஒரு செயலில் இறங்கியுள்ளார்.... தற்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் முறையாக விளிம்பு நிலை  குடும்பத்திலிருந்து கல்லூரிக்கு செல்லும் முதல் தலைமுறை மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு நடிகர் சூர்யா பரிசளித்துள்ளார். இந்த வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் தனது ரசிகர்களை விட்டு அதிகம் பதிவிடவைக்கிறார்... மேலும் சமூக வலைத்தளங்களில் அவரை பற்றியும் அதிகம் புகழ்ந்து எழுந்த வைக்கிறார் என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்... திரைப்படத்தை ஓட வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு என்பது போன்ற கமெண்ட்களும் அதிகம் இணையத்தில் எழுந்து வருகிறது....