Tamilnadu

என்ன நடக்க போகிறது காஷ்மீரில்? உள்துறை அமைச்சர் அவசர ஆலோசனை மீட்கப்பட போகிறதா ஆக்கிரமிப்பு காஷ்மீர்?

Amitshah  in kashmir
Amitshah in kashmir

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உள்துறை செயளாலர், ரா தலைவர், ஐபி இயக்குனர், சிஆர்பிஎப் தலைவர் ஜம்மு காஷ்மீர் டிஜிபி என்று மிக முக்கிய தலைவர்கள் இணைந்து நடத்திய ஒரு ஆலோசனை கூட்டம் எதற்காக என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது.? 


ஜம்மு மாநிலம் என்கிற  ஒரு அரசியல்நடவடிக்கைக்கு தானா? இல்லை வேறுஏதாவது ராணுவ நடவடிக்கைக்கு முந்தைய ஆலோசனையா ? என்பது தான் இப்பொழுது கேள்வியாக இருக்கிறது. அரசியல் நடவடிக்கைக்கு இவ்வளவு  பெரிய முக்கியத்துவம் தேவையில்லை ஏனென்றால் ஜம்மு காஷ்மீரில் எந்த ஒருஅரசியல் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும்

இனி அதை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் எழாத வண்ணம் போராட்ட குழுக்கள் அங்கே அடங்கி வாழ பழகி விட்டார்கள்.அதனால் அரசியல் நடவடிக்கைகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்காதுஅடுத்து இருப்பது ராணுவ நடவடிக்கைதான். அது என்ன மாதிரியான  ராணுவ நடவடிக்கையாக இருக்கும்? காஷ்மீரில் இனி ராணுவ நடவடிக்கை ஏதாவது இருக்கும் என்றால் அது நிச்சயமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  காஷ்மீரை  மீட்பதற்காகவே  இருக்க முடியும்.

ஒரு வேளை ஜம்மு தலைமையில் புதியமாநிலம் உருவாக்கப்பட்டாலோ இல்லைகாஷ்மீரை மட்டும் யூனியன் பிரதேசமாக அறிவித்தாலோ அதனுடன் இணைந்துநிச்சயமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் அறிவிக்கப்படும்.ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு நிச்சயமாக தேர்தல் நடைபெறுவது உறுதி. அது எப்படி இருக்க போகிறது?பழைய படி மாநில அந்தஸ்து உடன் தேர்தலா?இல்லை யூனியன் பிரதேசமாகவே தேர்தலா?

என்பது தான் ஜம்மு காஷ்மீர் பற்றிய எதிர் கால கேள்வியாகும். ஒரு யூனியன் பிரதேசத்திற்கு 90 சட்டமன்ற தொகுதிகள் என்பது தேவையில்லாதது . அதோடு பாகிஸ்தான் ஆக்கிரமி ப்பு காஷ்மீருக்கு ஏற்கனவே இருந்த 24 தொகுதிகளை பிஜேபி அரசும் ஒதுக்கியது நிச்சயமாக வேடிக்கை பார்க்க அல்ல எனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீ ரில் நிச்சயமாக ஏதோ பிஜேபி அரசு செய்ய இருக்கிறது என்று பலர் யூகிகின்றனர்.

ஏனென்றால் 2019 அக்டோபரில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட விசேஷ சலுகையான  370 பிரிவை மத்திய அரசு நீக்கியதோடு  ஜம்மு காஷ்மீரில் இருந்து லடாக்கை  பிரித்து தனி யூனியன் பிரதேசமாக  அறிவித்தும்  ஜம்மு காஷ்மீரை தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.இதில் லடாக் யூனியன் பிரதேசத்திற்குசட்டமன்றம்  கிடையாது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு 114 சட்டமன்ற தொகுதிகள் என்றும் அறிவிக்கப்பட்டது.இதில் ஜம்மு காஷ்மீர்க்கு 90 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் ஜம்முவுக்கு 44 தொகுதிகள் காஷ்மீருக்கு46 தொகுதிகள் என்று அறிவிக்கப்பட்டது

அதோடு  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு , 24 சட்டமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.1988-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு 24  தொகுதிகள்  என்று பெயரளவில் ஒதுக்கி அது நம்ம பகுதி தான் என்று சொல்லிக்கொண்டு அங்கு தே ர்தல் நடைமுறை எதையும் கண்டு கொள்ளாமல் காங்கிரஸ் ஆட்சிகள் இருந்து விட்டன.ஆனால் 70 ஆண்டு காலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் அடையாளத்தையே மாற்றி விட்ட பிஜேபி அரசு ஜம்மு காஷ்மீர் 

மறு சீரமைப்பு திட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அதே 24 தொகுதிகளை ஒதுக்கியதை விளையாட்டாக  எடுத்து கொள்ள முடியாது.அதனால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஒதுக்கப்பட்ட 24 தொகுதிகளிலும்நிச்சயமாக தேர்தல் நடைபெறும். என்று எதிர்பார்க்கலாம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் முதலில் அங்குள்ள பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி அங்கு இந்திய கொடியை பறக்க விட வேண்டும்.அதற்கு இந்தியா ஒரு ராணுவ நடவடிக்கைக்கு தயாராக வேண்டும்.

அதற்கான ஆலோசனையாக நேற்றுஅமித்ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் நோக்கமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை  மீட்பதாக கூட  இருக்கலாம்.ஜம்மு காஷ்மீர் சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு  அமித்ஷா ஒரு முறை அடுத்து ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறும் பொழுது பாகிஸ்தான் ஆக்கிரமித்துஉள்ள பகுதிகளிலும் நடைபெறும் என்றுகூறியது நிஜமாகுமா? என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

ஆனால் ஏதோ ஒன்று நடக்க போவது மட்டும் நிச்சயம்.