24 special

அன்று பார்த்த சாரதி "இன்று அண்ணாமலை" இலங்கையில் என்ன நடக்கிறது?

Modi and annamalai
Modi and annamalai

பிரபல சமூகவலைத்தள எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் இலங்கையில் அண்ணாமலை பயணம் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு :-தமிழக அரசு முன்பு உக்ரைனில் இருந்து தமிழர்களை தாங்கள் மீட்டுவந்ததாக மார்தட்டியது, இப்பொழுது இலங்கை தமிழருக்கு உதவ மத்திய அரசு அனுமதி தரவேண்டும் என முணங்குகின்றது


உக்ரைனில் தனியே சாதித்தவர்கள் இங்கு அதுவும் வெறும் 39 மைல் தொலைவுக்கு ஏன் முணங்குகின்றார்கள் என்றால் அதுதான் திராவிட மாடல், இலங்கை விவகாகரத்தில் அதாவது சிக்கல்கள் தொடங்கிய 1980களுக்கு பின் இந்தியாவின் ஆளுங்கட்சி பிரமுகர்கள் அல்லது தமிழக பிரதிநிதிகள் அதிகம் சென்றதில்லை

(1984ல் அன்றைய வெளியுறவுதுறை அமைச்சர் நரசிம்மராவ்தான் அங்கீகாரமான இந்திய பிரதிநியாக சென்றார் அதன் பின் காட்சிகள் மாறின என்னவெல்லாமோ நடந்தது 2006ல் பிரபாகரன் கொல்லபட்டபின் கனிமொழி, திருமா சென்றதெல்லாம் வேறுவகை அதனால் ஆகபோவது ஒன்றுமில்லை, ஆனதும் ஒன்றுமில்லை)

இலங்கை விவகாரத்தில் உருப்படியான விஷயத்தை செய்த ஒரே நபர் இந்திராகாந்தி, அவர் தமிழரான பார்த்தசாரதியினைத்தான் இலங்கை விவகாரங்களுக்கான அதிகாரபூர்வ பிரநிதியாக அறிவித்தார், அது சரியான அணுசரனையாக இருந்தது.

இந்திராவுக்கு பின்பே எல்லா குழப்பங்களும் வந்தன, பார்த்தசாரதி மாற்றபட்டார்,  இப்பொழுது மோடி அரசு அந்த பார்த்தசாரதியினைத்தான்  இலங்கை விவகாரங்களுக்கு மறுபடி நியமித்திருக்கின்றது, இலங்கை தொடர்பான இந்திய நடவடிக்கைகளில் ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்கலாம், அந்த விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் அல்லது பிரமுகர்களை டெல்லி தவிர்த்தே வந்தது.

அதற்கு காரணமும் இருந்தது அன்று அமிர்தலிங்கத்தை வரவேற்க எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் நடந்த போட்டி, பின் போராட்ட குழுக்களை இவர்கள் இருவரும் ஆதரித்த அரசியல் என பல இருந்ததால் தமிழக அரசியல்வாதிகள் யாரையும் டெல்லி இவ்விவகாரத்தில் சேர்க்கவில்லை, வைகோ கள்ளதோணியில் சென்று இந்திய ராணுவத்தையே எதிர்த்ததெல்லாம் தேசவிரோதம் என்றாலும் டெல்லி காங்கிரஸ் அதை கண்டுகொள்ளவில்லை.

தமிழக பிரதிநியாக உலக அரங்கில் முன்பு பேசியவர் பண்ருட்டி ராமசந்திரன், எம்ஜிஆர் காலங்களில் ஐநா சபையில் அவர்தான் ஈழபிரச்சினை பேசினார்

அடுத்து ப.சிதம்பரம் முயற்சித்தார் ஆனால் பெரிதாக எதுவுமில்லை, இதை தவிர தமிழகத்தில் யாரும் இந்திய அரசின் ஈழமுகங்களாக அறிவிக்கபடவில்லை, வைகோ திருமா கவுதமன், சைமன் போன்ற ஈழ வியாபாரமெல்லாம் கணக்கில் வராது.

இப்பொழுது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இலங்கை பயணம் பெரும் கவனத்தை இந்தியாவிலும் இலங்கையிலும் கொடுக்கின்றது, முதன் முறையாக ஆளும் பலமான பாஜக தங்கள் கட்சி பிரமுகரை அதுவும் தமிழக தலைவரை களத்தில் இறக்கியிருப்பது இலங்கையின் அலரி மாளிகையினை அலற வைக்கின்றது.

இந்தியா இலங்கைக்கு மிக மோசமான காலகட்டமான இந்நேரம் கைகொடுப்பது நிஜம், இன்னும் பல்லாண்டு காலம் இந்தியா அவர்களை சுமக்க வேண்டிய நிலையும் இலங்கைக்கு உண்டு, இந்நேரம் 13ம் சட்டபிரிவினை, அதாவது 1987ல் இந்தியாவும் இலங்கையும் செய்த ஒப்பந்தபடி இலங்கை தமிழருக்கு உரிமைகள் கிடைக்க வழிசெய்யும் அந்த சட்டபிரிவினை திருத்த முயற்சிக்கின்றது அது நோக்கித்தான் இந்தியா நகருகின்றது என்கின்றன உலக செய்திகள்.

அந்த ஒப்பந்தத்தை 1987லே பிரபாகரன் ஏற்றிருந்தால் இவ்வளவு அழிவு வந்திருக்காது, ஆனால் அந்த ஒப்பந்த தயாரிப்பில் தமிழர் சார்பாக யாரும் இல்லை எனும் பிரபாகரனின் வாதத்தையும் மறுக்கமுடியாது, நிச்சயம் தமிழர் தரப்பில் ஒருவர் இருந்திருக்க வேண்டும் ராஜிவ் அரசு அதை செய்யவில்லை

இப்பொழுது தமிழக அண்ணாமலையினை இந்தியா அனுப்பியிருப்பது அந்த சட்டதிருத்தத்தின் முன்னோடியாக பார்க்கபடுகின்றது, ஒருவேளை அந்த சட்டதிருத்தம் செய்யபட்டால் அண்ணாமலை அதில் பங்கெடுக்கும் வாய்ப்பு வந்தால் உலகின் மிக முக்கிய வரலாற்றில் அதுவும் ஒன்றாகும்.

இதுவரை திராவிடமும் காங்கிரசும் செய்யாத அல்லது செய்ய விரும்பாத பெரும் சிக்கலை பாஜகதான் இலங்கை தமிழருக்கு கொடுத்தது எனும் மிகபெரிய வரலாற்று சாதனையாகும் அண்ணாமலை மிகபெரிய இடத்தில் நிற்பார், நகரும் காட்சிகள் அதை நோக்கித்தான் நகர்கின்றன.

முதல் முறையாக இலங்கை தமிழர் பிரச்சினையினை இந்திய தமிழன் ஊடாக தீர்க்கும் காட்சி தொடங்குகின்றது, எல்லாம் நல்லபடியாக முடிந்தால் எல்லாருக்கும் நல்லது என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.