24 special

வருகின்ற மசோதாவை அப்படியே ஏற்பதற்கு ஆளுநர் எதற்கு?...கேள்வி எழுப்பிய தமிழிசை!

mk stalin, tamilisai
mk stalin, tamilisai

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் தின விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:புதுவை துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு மூன்றடுக்கு பாதுகாப்பு இருந்தது. நான் ஆளுநராக பதவி ஏற்றபின் அதை எடுத்துவிட்டு ஓரடுக்கு பாதுகாப்பாக குறைத்துக் கொண்டேன்.


எதிர்க்கட்சியினர் தங்களது கோரிக்கையை என்னை சந்தித்தது எப்போது வேண்டுமானாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஆகவே ஆர்ப்பாட்டம் வன்முறை போன்றவற்றில் யாரும் ஈடுபட வேண்டாம். எனது பாதுகாப்பை அதிகாரிகள், பார்த்துக் கொள்வார்கள்.புதுச்சேரி சென்டாக் கலந்தாய்வு தாமத விவகாரத்தில், அதிகாரிகள் தவறிழைந்து விட்டார்கள். அதனால் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும். அதே நேரத்தில் மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சரிடம் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். அவரது நடவடிக்கை காரணமாக மாணவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

ஆகவே கலந்தாய்வு தாமதமாக நடந்த நிலையில் கல்லூரிகளில் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை, புதுவை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து பேசலாம். அதிகாரிகளது செயல்பாடு தாமதத்தால் முதல்வருக்கு சில சங்கடங்கள் நேர்ந்திருக்கலாம். அதுகுறித்தும் முதல்வரிடம் பேசியுள்ளேன். ஆகவே பிரச்னைகள் பேசி தீர்க்கப்படும்.தமிழக ஆளுநர் அரசு மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் இருப்பது குறித்த பிரச்சனையில் கருத்துக் கூற விரும்பவில்லை தெலங்கானாவிலும் இதுபோன்ற பிரச்சனை இருந்தது கையெழுத்திடாததற்கு சரியான காரணத்தை அரசுக்கு விளக்கி இருந்தேன்.

அதன் அடிப்படையில் முதல்வருடன் பேசி பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டது ஆகவே அதேபோல் தமிழக முதல்வரும், ஆளுநரும் அமர்ந்து  பிரச்சினையை தீர்க்க வேண்டும்.ஆளுநர், முதல்வரும் சுமூகமாக இருந்தால் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். கேரளம் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு தொடர்பாக புதுவையில் உள்ள தேவாலங்களில் பலத்த பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் பேசிய தெலுங்கானா மாநில முதல்வர் தமிழிசை ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் இல்லை, மசோதாக்களின் சாதக பாதங்களை ஆராய்வது தான் ஆளுநரின் கடமை.

ஒரு மசோதா வந்ததும், அதற்கு உடனே கையெழுத்து போட வேண்டும் என மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன. மசோதாவை திருப்பி அனுப்பினால், பாஜககாரர் போல் செயல்படுவதாக முத்திரை குத்துகின்றனர்.எனவே நாட்டில் நடக்கும் பிரச்சனை குறித்து ஆளுநரை முதலமைச்சர் நேரடியாக சந்தித்து நட்புறவோடு பேச வேண்டும். ஆளுநர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மாநில அரசுகள் கொடுப்பதில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் திமுகவை மறைமுகமாக கூறினார். இன்று அதனை உறுதிப்படுத்தும் விதமாக தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் ஆளுநருக்கு முறையான உரிமையை திமுக அரசு கொடுப்பதில்லை. அதாவது ஆளுநர் செல்லும் இடத்திற்கு கருப்பு கொடி காட்டவும், ஆளுநரை விமர்சித்து பேசவும் மட்டுமே செய்து வருவது குறிப்பிடத்தக்கது.