Tamilnadu

மற்றமாநிலங்களில் குறையும் சீனத்தொற்று தமிழகத்தில் மட்டும் இரட்டிப்பாவது ஏன்..!?

மற்றமாநிலங்களில் குறையும் சீனத்தொற்று தமிழகத்தில் மட்டும் இரட்டிப்பாவது ஏன்..!?
மற்றமாநிலங்களில் குறையும் சீனத்தொற்று தமிழகத்தில் மட்டும் இரட்டிப்பாவது ஏன்..!?

இந்தியாவில் சீனத்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் மாநிலமாக இருந்த டெல்லி, மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் மூன்றே வாரங்களில் குறைய ஆரம்பித்தது சற்றே ஆறுதலான விஷயம்.


2021 ஏப்ரல் 20 அன்று பாதிக்கப்பட்ட நபர்கள் எண்ணிக்கை28395 ஆக இருந்தது.. ஆனால் மே 4 அன்று 6430 ஆக குறைந்தது.. நேற்று மேலும் 25% கொரானா தொற்று எண்ணிக்கை குறைந்தது. இதற்கான காரணம் ஐவர்மெக்டின் (ivermectin) எனும் மருந்து..மே 10 கோவா முதலமைச்சரும் டாக்டருமான ப்ரமோத் சாவந்த் ஐவர்மெக்டினை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

இதன் பலனாக 3124ஆக இருந்த தினசரி தொற்று ஐந்தே நாட்களில் 1314ஆக குறைந்தது.இதற்கிடையில் கோவாவைத் தொடர்ந்து உத்தரகாண்ட், கர்நாடகா மற்றும் உத்திரப்பிரதேம் ஆகிய மூன்று மாநிலங்களும் ஐவர்மெக்டினை பயன்படுத்த ஆரம்பித்தன.அதனால் உடனடியாக மாற்றம் தெரிய ஆரம்பித்தது.

உத்திரப்பிரதேசத்தில் 37944 ஆக இருந்த சீனத்தொற்று வெறும் நான்கே நாட்களில்( மே 16 ) 10505 ஆக தடாலடியாக குறைந்தது. AIIMS ஏப்ரல் 20 அன்று வெளியிட்ட நெறிமுறைகளை பின்பற்றி திரு.யோகி ஆதித்யநாத் அவர்கள் சாதித்து காட்டியுள்ளார்.இதில் சோகமான செய்தி என்னவெனில்

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஐவர்மெக்டினை பயன்படுத்தி சீனத்தொற்றை குறைக்கும் வேளையில் விடியல் தருவார் என பெரிதும் எதிர்பார்ரக்கப்பட்ட திரு.மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஐவர்மெக்டினை புறந்தள்ளி, WHO வால் புறக்கணிக்கப்பட்ட ரெம்டெசீவரை சிபாரிசு செய்கிறார்.பெரு முன்னாள் அதிபர் (2020 நவம்பர் வரை) ஐவர்மெக்டினை புறந்தள்ளி அதனால் பெருவில் 78000த்திற்கும் மேலான உயிர்களை காவு வாங்கினார்..

திரு.மு.க ஸ்டாலினும் இதே தவறை இழைக்கிறார்.ரெம்டெசீவர் ஒரு டோஸின் விலை 3000டாலர்.இங்கு மக்கள் உயிர் மிக முக்கியம். ஐவர்மெக்டினை தவிர்த்ததால் சுடுகாட்டில் கூட இடம் இல்லாத அளவிற்கு கொத்து கொத்தாய் மடிகின்றனர்.

கோவாவில் முதலமைச்சர் மருத்துவம் பற்றிய புரிதல் இருப்பதால் சீனத்தொற்றை கட்டுப்படுத்துகிறார்.திரு.ஸ்டாலின் தினமும் 20000 ரெம்டெசீவர் வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறார்.ரெம்டெசீவர் என்பது ஒரு ஆண்டி வைரல் ஏஜெண்ட் மட்டுமே.ஆபத்தான நிலையில் cytokine storm ஏற்பட்ட பின்னர்...

இந்த முற்றிய நிலையில்(Later stage) ஆக்ஸிஜன் மற்றும் ஸ்டீராய்டுகளே  உதவுகிறது.ஆனால் நிலையில் கொடுக்கப்படும் ஐவர்மெக்டின் மிக்சிறப்பாக இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துகிறது.அதாவது ஐவர்மெக்டின் உடல்உறுப்பு வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.அதுவும் ஒரே டோஸ்.வென்டிலேட்டர் மூலமாகவே வெளியேறவும் செய்கிறது.தமிழகத்தில் ஏப்ரல் 20லிருந்து மே 15க்குள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதே கால கட்டத்தில் (ஏப்ர்ல 20- மே15) டெல்லியில் 78% பாதிப்பு குறைந்துள்ளது. 

ஆனால் தமிழகத்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.20000 டோஸ் ரெம்டெசீவரின் விலை 60 மில்லியன் டாலர்கள். அதுவே 20000 ஐவர்மெக்டின் விலை சிலநூறு ரூபாய்கள் மட்டுமே..

எந்த வளர்ந்த நாடுகளோ இல்லை பணக்கார நாடுகளோ பலமில்லியன் டாலர்களை கொடுத்து ரெம்டெசீவரை வாங்கவில்லை.அதன் பயன் எப்படி என அறிந்து வைத்திருக்கிறார்கள்.திரு.ஸ்டாலின் அவர்கள் மட்டும் ஏன் இன்னும் ஐவர்மெக்டினை ஒதுக்கி அதிகவிலை கொடுத்து பலனில்லாத ரெம்டெசீவரின் பின்னால் போகிறார் என்பது கடவுளுக்கும் ஸ்டாலினுக்கும் மட்டுமே வெளிச்சம்.

தமிழக மக்களின் உயிர் இப்போது திமுகவின் கைகளில். https://www.medrxiv.org/content/10.1101/2021.01.28.21250706v1 சமூக இடைவெளி பின்பற்றுவோம் சமூக நலம் காப்போம். மாஸ்க் அணிவோம் மரணம் தவிர்ப்போம்..

.....உங்கள் பீமா