24 special

கமிஷன் கேட்ட அமைச்சர் கைது ! தமிழகத்தில் அதிரடி தொடருமா?

stalin ,tr balu
stalin ,tr balu

கமிஷன் கேட்ட அமைச்சரை பதவியில் இருந்து நீக்கியதுடன் அவரை உடனடியாக கைது செய்து பஞ்சாப் அரசியலில் அதிரடியை தொடங்கி இருக்கிறார் அம்மாநில முதல்வர்,இந்த சூழலில் தமிழகத்தில் குற்றசாட்டிற்கு உள்ளான அமைச்சர்களுக்கு  இதே போன்று அதிரடி நடவடிக்கை இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.


இது தொடர்பாக பஞ்சாப் மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அரசு பணி ஒப்பந்தங்களுக்கு தனக்கு ஒரு சதவீதம் கமிஷன் வேண்டும் என அமைச்சர் விஜய் சிங்லா கேட்டுள்ளார். இது தொடர்பாக புகார் வந்ததால், விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் கிடைத்ததால், விஜய் சிங்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்திய வரலாற்றில் இரண்டாவது முறையாக, ஊழல் புகாருக்கு உள்ளான தனது அமைச்சர் மீது முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2015ல் ஊழல் புகார் காரணமாக அமைச்சரை பதவி நீக்கம் செய்து கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து விஜய் சிங்லா மீது வழக்குப்பதிவு செய்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.இது தொடர்பாக முதல்வர் பக்வந்த் மன் கூறுகையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மியை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர். அதற்கு ஏற்ப செயல்பட வேண்டியது நமது கடமை. இந்திய தாய்க்கு, கெஜ்ரிவால் போன்ற மகனும், பக்வந்த் மன் போன்ற வீரர்களும் உள்ளனர். ஊழலுக்கு எதிரான போர் தொடரும். ஊழலை அடியோடு ஒழிப்போம் என கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார்.

ஒரு சதவீத ஊழலுக்கு கூட இடம்இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் பக்வந்த் மன் கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன, சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் மீது பிரபல பத்திரிகை விகடன் அடுக்கடுக்கான ஊழல் குறித்த செய்திகளை வெளியிட்டது.

போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் ஸ்வீட் கொள்முதல் செய்ய ஊழலில் ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது, பொங்கல் பொருள்கள் கொள்முதலில் ஊழல் இருந்ததாக பெரும் விமர்சனம் எழுந்தது இந்த சூழலில் விடியல் ஆட்சி என திராவிட மாடல் பேச கூடிய முதல்வர் ஸ்டாலின் இது போன்ற நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.