24 special

கோவிலில் தூக்குபோட்டு தற்கொலை செய்த காதல்ஜோடிகள்..!?

Uttar Pradesh couple
Uttar Pradesh couple

உத்திரபிரதேசம் : புடான் மாவட்டத்தில் உஷாவான் கவள்சர்கதுற்குட்பட்ட கிராமத்தில் அமைந்திருக்கும் கோவிலின் மேல் பகுதியில் உள்ள அறையில் மைனர் காதல்ஜோடிகள் தூக்கில் தொங்கியபடி பிணமாக கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


உத்திரபிரதேச மாநிலம் மன்சா நக்லா கிராமத்தில் உள்ள ஒரு கோவிலின் மேற்புறத்தில் உள்ள அறையில் பூச்சிக்கொல்லி மருந்து, பீர் பாட்டில் மற்றும் கண்ணாடி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. முதலில் அந்த மைனர் காதல்ஜோடி பூச்சிக்கொல்லி கலந்த பீரை அருந்திவிட்டு தனித்தனியாக சேலையில் தூக்குமாட்டி தொங்கியுள்ளனர்.

அந்த சிறுவனுக்கு வயது 17 என்றும் சிறுமிக்கு 16 வயது என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில் " நேற்று காலையில் கோவிலுக்கு வந்த சிறுமியின் தாயார் இரண்டு சிறுவர்களும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின்னர் கோவிலின் பூசாரிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

பின்னர் பூசாரி நேமிதாஸ் காவல்துறைக்கு அலைபேசியில் தொடர்புகொண்டு விவரத்தை தெரிவித்திருக்கிறார். பூசாரியின் கூற்றுப்படி இரண்டு மைனர்களும் நீண்டநாள் காதலித்து வந்துள்ளனர். குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர். அதன்பிறகு இருவரும் பீரில் விஷமருந்தை கலக்கி குடித்துவிட்டு அதன்பின்னர் தூக்கில் தொங்கியுள்ளனர்" என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்புக்குள்ளானது. இருவரையும் யாரும் துன்புறுத்தினார்களா அல்லது சிறுமியை யாரும் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர். மேலும் இது இரண்டு சிறுவர்களும் வேறுவேறு ஜாதி என்பதால் ணவப்படுகொலை செய்யப்பட்டார்களா என சநதேகம் எழுவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.