24 special

திமுகவிற்கு எதிராக அதிமுக அதிரடி அறிவிப்பு!

edapadi, mk stalin
edapadi, mk stalin

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தாதது, ஆனால் ஆட்சிக்கு வந்த பின் 10% மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக சாடியிருந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. கடந்த வாரம் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தனியார் ஏஜென்சி மூலம் பணியிடங்களை தேர்ந்தெடுக்க ஒப்பந்த புள்ளி கோரியுள்ள முடிவை கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி வலியுறுத்தியிருந்தார்.தற்போது, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் அக்., 09ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அறிவிப்பில்: 'உழைப்பவரே உயர்ந்தவர்', 'உழைப்பே உயர்வு தரும்' என்ற பொன்மொழிகளை


தாரக மந்திரமாகக் கொண்டு உழைத்து வரும் தொழிலாளர்கள், அனைத்து நிலைகளிலும் இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, கழக ஆட்சிக் காலங்களில் தொழிலாளர்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியும், எண்ணற்ற உதவிகளை செய்தும், தொழிலாளர்களுடைய நலன்கள் பேணி பாதுகாக்கப்பட்டு வந்தது.விடியா திமுக அரசு பதவியேற்று  29மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில், தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு சிறிதும் அக்கறை காட்டாமல் தொழிலாளர் விரோத அரசாக விளங்கி வருகிறது. இந்நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் துவக்கிடவும்; போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கும் உள்நோக்கத்தோடு டெண்டர் முறையில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிடவும்; 100 நாட்களுக்குள் வழங்குவதாக உறுதியளித்த பழைய ஓய்வூதியம்; ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) மற்றும் பணப் பயன்களை உடனடியாக வழங்கிடவும்,

விடியா திமுக அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், 9.10.2023 திங்கட் கிழமை - பிற்பகல் 3 மணியளவில், சென்னை, பல்லவன் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலும், அண்ணா தொழிற்சங்கபி பேரவை தலைவர் கமலக்கண்ணன் முன்னிலையில் நடைபெறவுள்ளது.விடியா திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைப் கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.