24 special

சரியா போச்சுப்போ…. நடிகர் விஜய் என்ன செய்யப்போகிறார்? தீயாய் பரவும் அந்த விஷயம்…!

Actor vijay
Actor vijay

நடிகர் விஜய் என்றால் சினிமா நடிகர் என்பதை கடந்து இப்போது பல்வேறு சர்ச்சைகள் அவரை சுற்றி வட்டம் அடிக்க தொடங்கி இருக்கின்றன, முன்பெல்லாம் விஜய் படங்கள் வெளியாகிறது என்றால் அதில் அரசியல் சர்ச்சைகள் கிளம்பும் ஆனால் தற்போது விஜயை நடிகை ஒருவருடன் ஒப்பிட்டு செய்தி வெளியானது விஜய் குடும்பத்தில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.


சினிமா நட்சத்திரங்கள் என்றாலே சர்ச்சைகள் கிசுகிசுகள் என்பது சாதாரண விஷயம் என்றாலும் சமீபத்தில் விஜயை நடிகை கீர்த்தி சுரேசுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் யூகங்கள் பரவியதும், போதாத குறைக்கு விஜய் தனது மனைவியை விவாகரத்து செய்ய போகிறார் என்றெல்லாம் ஒரு கும்பல் கிளப்பி விட அது மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இந்த சூழலில் தான் நடிகர் விஜய் மிக பெரிய வேதனை அடைந்து இருக்கிறாராம் தந்தை தாயை தனியே அனுப்பி விட்டேன் என்ற கட்டுக்கதையை பரப்பினார்கள்,பின்னர் இப்போது மனைவியை பிரிய போகிறேன் என்ற செய்தியை பரப்பிவிட்டார்கள் போதாத குறைக்கு சமீபத்தில் நீண்ட நாட்கள் நற்பணி மன்றத்தில் இருந்த நபருக்கு இலவசமாக வீட்டை கொடுத்து இருந்தேன் அதை காலி செய்ய சொன்னால் நம்மை ஏதோ விரோதி போல பார்க்கிறார்கள் இதெல்லாம் இயல்பாக நடப்பது போல் தோன்றவில்லை என தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் சொல்லி வேதனை அடைந்து இருக்கிறாராம் விஜய்.

இதையடுத்து விஜய் அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம் அதன் படி இனி சமூக வலைத்தளங்களில் தன் மீதோ தன்னை பற்றியோ போலி செய்தியை பரப்பும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க முடிவு எடுத்து இருக்கிறதாம் விஜய் தரப்பு.

விஜய் இப்படி இருக்க எதிர் தரப்போ படத்தில் ஒன்றை விஜய் பேசிவிட்டு நிஜத்தில் வேறு மாதிரி நடந்து கொள்கிறார் அம்மா அப்பாவை வணங்கி பாரு எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் என பாடல் வரிகளை வைத்தவர் விஜய்... அதே விஜய் அவரது தந்தையை சமீபத்தில் சந்தித்து பேசி இருக்கிறாரா?

சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏதோ தெரியாத நபர்களை போல கட்டி பிடித்து விட்டு சென்றார் இதெல்லாம் விஜய்க்கு சரியாக தெரியவில்லையா? விஜய் தன் மீதான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்றால் முதலில் அவர் அறிக்கை மூலம் அனைத்தையும் தெளிவு படுத்த வேண்டும் பின்பு அவர் மீது அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என பதிலடி கிடைக்கிறது.

மொத்தத்தில் விஜய் குறித்து காட்டு தீயாக பரவும் பல்வேறு விஷயங்களுக்கு விஜய் தரப்பு முற்று புள்ளி வைக்குமா இல்லை வழக்கம் போல அமைதியாக கடந்து செல்லுமா என்பதை பொறுத்து இருந்துதன் பார்க்க வேண்டும்.