24 special

மின்தடை..! மாறிப்போன மாப்பிள்ளை..! வினோத சம்பவம் !

Power cut changed groom
Power cut changed groom

மத்தியபிரதேசம் : மின்தடை அன்றாட வாழ்வை புரட்டிப்போடும் என்பதற்கு பல கண்கூடான சம்பவங்களை காணலாம். கடந்த சில வருடங்களுக்கு  முன்னர் எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு சென்ற இரு ஜோடிகள் மனைவிகளை மாற்றி ஏற்றி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் மின்தடை காரணமாக சகோதரியின் மாப்பிள்ளையுடன் தவறுதலாக திருமணம் நடைபெற்றிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மின்தடை ஜோடியை மாற்றிய சம்பவம் உஜ்ஜைனி முழுக்க சலசலப்பை உருவாகியுள்ளது.

நேற்று மத்தியபிரதேசம் உஜ்ஜைனியில் ரமேஷ் லாலா என்பவரின் மகள்கள் நிகிதா மற்றும் கரிஷ்மாவுக்கு வெவ்வேறு குடும்பங்களை சேர்ந்த டாங்வாரா போலா மற்றும் கணேஷ் ஆகியோர் இந்த சகோதரிகளை திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தின்போது மின்தடை ஏற்பட்டது. அதையடுத்து மாப்பிள்ளையை மணப்பெண்களுடன் வலம் வர புரோகிதர் அறிவுறுத்தினார்.

மணமக்களை வீட்டிற்கு அழைத்துச்சென்றபோது தான் இந்த விபரீதம் உணரப்பட்டது. மாப்பிள்ளைகள் மாறி உட்கார்ந்திருக்க இருவீட்டாரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். அதன்பிறகு நடந்த கலாட்டாவில் மின்தடையின்போது மாப்பிள்ளைகள் மாறிப்போன விஷயம் தெரியவந்தது. அதையடுத்து மீண்டும் மணமக்கள் சடங்குகள் செய்ய குடும்பத்தினரால் அறிவுறுத்தப்பட்டு மீண்டும் சடங்குகள் நடைபெற்றன.இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.