24 special

பொன் மாணிக்கவேல் விசயத்தில் உண்டான அதிரடி திருப்பம்...! அரசுக்கு எதிராக சவால் விட்ட பொன்மாணிக்கவேல்...!

ponmanikkavel
ponmanikkavel

கோவில் விஷயத்தில் திமுக அரசிற்கு ஆதரவாக கேள்வி கேட்ட பத்திரிகையாளரை எதிர் கேள்வி எழுப்பி இருந்தார் பொன்மாணிக்கவேல் மேலும் நீங்கள் இஸ்லாமியர் உங்களுக்கு எங்கள் கோவில் விஷயத்தில் கேள்வி கேட்க தகுதி இல்லை எனவும் விமர்சனம் செய்து இருந்தார் பொன்மாணிக்கவேல் இந்த நிலையில் தான் நிருபர் காவல் நிலையம் சென்று இருக்கும் நிலையில் பரபரப்பு திருத்தம் உண்டாகி இருக்கிறது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு கடந்த 29 தேதி வருகை தந்த காவல்துறை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் சாமி தரிசனம் முடித்து பின்னர் செய்தியாளர் சந்திபில் கூறியதாவது


பழமைவாய்ந்த சட்டைநாதர் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் பணிக்காக குழி தோண்டிய போது ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டது அதனை தற்போது அரசு கட்டுபாட்டில் கோவில் உள்ளே தனி அறை அமைத்து அதில் வைத்து பூட்டி சீல் வைத்து போலீசார் பாதுகாப்பில் அரசு கட்டுபாட்டில் வைத்துள்ளது அதனை அரசு கருவூலத்திற்கு எடுத்து செல்ல கூடாது அது கோவிலுக்கு தான் சொந்தமானது எனவும் அதனை அரசு எடுக்க முயன்றால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக போராட வேண்டும் என ஆவேசமாக பேசிய பொன்மாணிக்கவேல்,

பின்னர் மாவட்ட ஆட்சியர் அரசு கணக்கு பிள்ளையாக செயல் படமால் மக்களுக்காக செயல்பட வேண்டும் சில குசும்பு ஆட்சியரும் இருக்கின்றனர் அவர்களை மக்கள் சும்மா விட கூடாது எதிர்த்து கேள்வி கேளுங்க என பேசினார் இந்த சிலைகளை திருப்பி கோவிலுக்கு கொடுப்பதால் உங்களுக்கு என்ன தேர்தல் ஓட்டு போய்டுமா?திருப்பி கொடுத்தால் ஓட்டு எல்லாம் போய்டாது என்றார் பின்னர் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்து தற்போது படி படியாக செய்வதாக கூறுவது ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றுவதாகவும் இது என்ன டாஸ்மாக்கா படி படியாக குறைக்க என கேள்வி எழுப்பியதோடு தற்போது தேர்தல் வருவதால் இரண்டு கட்சிகளும் ஏமாற்றி வருவதால் மூன்றாவது கட்சிக்கு வாக்கு அளிங்க என கூறினார்,

தமிழக முதல்வர் நான் கோவிலுக்குள்ள வரவே மாட்டேன் ஆனால் ஆட்சி செய்வேன் என சொன்னா என்ன அர்த்தம் தேர்தல் வருவதற்கு முன்னே சொல்ல வேண்டும் நான் கோவிலுக்குள்ள வர மாட்டேன் என் ஆளு வரானோ,என் வீட்டு கார அம்மா வருதோ எனக்கு தெரியாதுனு தேர்தலுக்கு முன்னே சொன்னா அது நேர்மை ஆனால் தேர்தல் முடிந்து இப்படி சொன்னா நான் ஏமாறா மாட்டேன் என தமிழக முதல்வரையும் அவரது குடும்பத்தையும் நேரடியாக விமர்சனம் செய்தார்.

ஆங்கிலேயர் காலத்தில் ஆட்சியர்கள் மக்களை கண்டு பயந்தனர் ஆனால் தற்போது சுதந்திரம் அடைந்த பின்னர் உள்ள ஆட்சியர்களை கண்டு நாம் பயப்பட வேண்டியாதாக உள்ளதாகவும் எதிர்த்து கேள்வி கேளுங்க என தெரிவித்தார்,இந்துக்கள் அனைவரும் சொரணை இல்லாதவர்களாக பூமிக்கு அடியில் கிடைத்த திருமேனிகள் அனைத்தும் தஞ்சாவூரில் பூட்டி வைத்துள்ளனர் அதனை இந்துக்களே காசு கொடுத்த வரிசையில் நின்று பார்த்து வருவதாகவும் மற்றவர்கள் காசு கொடுத்து பார்த்தால் தப்பில்ல என தெரிவித்தார்.பின்னர்  தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பேசிய ஐ.ஜி பொன்மாணிக்கவேல் உங்க தாத்தா பெயர் என்ன? அவரோடு அப்பா பெயர் என அடுத்தடுத்து கேட்டடார்.

இஸ்லாமியர் நீங்கள் கோவில் குறித்து கேட்பது தவறு சார் முதலில் தெரிந்து கொண்டு பேசுங்கள் என அழுத்தம் திருத்தமாக சொன்னார் பொன் மாணிக்கவேல்.இதையடுத்து பொன்மாணிக்கவேலுடன் வாக்குவாதம் நிருபர் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர்தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சீர்காழி காவல்நிலையத்தில் இஸ்லாமிய மதத்தையும் என்னையும் தரக்குறைவாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய பொன் மாணிக்கவேலை கைது செய்து செய்ய கோரி புகார் மனு அளித்தார் இதே போல சீர்காழி தாலுகா பத்திரிகையாளர் சங்கம் சார்பிலும் பத்திரிகையாளரை மத ரீதியாக அவமதிப்பு, தமிழக முதல்வர், நீதிமன்ற சட்டம்,இந்து சமயத்துறை ஆகியவற்றை தரகுறைவாக பேசிய ஐஜி பொன் மாணிக்கவேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய கோரி சீர்காழி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

இங்குதான் தற்போது திருப்பம் உண்டாகி இருக்கிறது தான் சொன்ன கருத்து சட்ட ரீதியாக எந்த தவறும் இல்லை தான் அரசை விமர்சனம் செய்ததும் சரி அதே நேரத்தில் இந்து கோவில்களுக்கு உள்ள உரிமையை பேச இந்துக்களுக்கு தான் தகுதி இருக்கிறது என தெளிவாக தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறாராம் பொன் மாணிக்கவேல்.அரசிற்கு எதிராக பேசுவதால் இது போல் பூச்சாண்டி வேலை எல்லாம் செய்வார்கள், உலக சிலை கடத்தல் காரர்களை பார்த்தவன் நான் எதற்கும் தயார் வா பார்க்கலாம் கோவில்களை காப்பாற்றமல் விடமாட்டேன் என அழுத்தம் திருத்தமாக இருக்கிறாராம் பொன் மாணிக்கவேல்.